சென்னை மெரினா கடற்கரையில் பயிற்சி டாக்டர் தற்கொலை: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,May 09 2020]

சென்னையை சேர்ந்த பயிற்சி டாக்டர் ஒருவர் சென்னை மெரினா கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்துவரும் அர்ஜூன் என்ற 35 வயது பயிற்சி டாக்டர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சல் இருப்பதாக தெரிகிறது. மேலும் இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை என்பதும் குடும்பத்தில் சில பிரச்சினைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்று தனது காரை சென்னை மெரினா கடற்கரைக்கு ஓட்டி வந்த டாக்டர் அர்ஜுன், காரை கலங்கரை விளக்கம் அருகே நிறுத்தி விட்டு மெரினா கடலில் சென்று தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரிய வருகிறது. மேலும் தற்கொலைக்கு முன்னர் தனது சகோதரருக்கு அவர் காரின் லொகேஷனை வாட்ஸ்-அப்பில் அனுப்பி உள்ளார் என்பதும் தனது தற்கொலைக்கு யாரும் காரணமல்ல என்றும் அம்மா அப்பாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு சகோதரருக்கு மெசேஜ் அனுப்பி உள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது

சென்னையை சேர்ந்த பயிற்சி டாக்டர் ஒருவர் மன உளைச்சல் காரணமாக திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

டாஸ்மாக் கடை மூடப்பட்ட விவகாரம்: தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த இரண்டு மாதங்களாக பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் மத்திய அரசு அனுமதித்த தளர்வின் அடிப்படையில் ஒருசில மாநிலங்களில்

கொரோனா நோயாளி தப்பியதால் சென்னை மருத்துவமனையில் பரபரப்பு

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் தொடர்பால்

ராகவா லாரன்ஸ் கோரிக்கையை உடனே செயல்படுத்திய கேரள முதல்வர்!

திருவனந்தபுரத்தில் உள்ள NIMS மருத்துவமனையில் தமிழகத்தை சேர்ந்த வறுமையில் வாடும் பத்திரிகையாளர் அசோக் என்பவரின் தாயார் முடக்குவாதத்தால் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி

தமிழக முதல்வருக்கு நன்றி கூறிய இயக்குனர் பாரதிராஜா!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கும் நன்றி தெரிவித்து இயக்குநர் இமயம் பாரதிராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா குறித்து அதர்வா கூறிய கமெண்ட்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய நடிப்பு ஆகியவற்றை பாராட்டாதவர்களே தென்னிந்தியாவில் இருக்க முடியாது என்பது தெரிந்ததே.