தெலுங்கானாவை அடுத்து பெற்றோர்களுக்க்கு எச்சரிக்கை விடுத்த தமிழகம்

  • IndiaGlitz, [Thursday,March 22 2018]

சமீபத்தில் தெலுங்கானாவில் ஒரு அதிரடி அறிவிப்பு வந்தது. 18 வயதுக்கு குறைவானவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டினால், அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் கைது செய்யப்படுவார்கள் என்பதுதான் அது. இந்த அறிவிப்புக்கு பின்னர் சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது அம்மாநிலத்தில் பெருமளவு குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. லைசென்ஸ் இல்லாத சிறுவர்கள் வாகனங்களை ஓட்டுவதால் அவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி சாலையில் செல்லும் அப்பாவிகளும் பாதிக்கப்படுவதால் தெலுங்கானா அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டது

இந்த நிலையில் தெலுங்கானாவை அடுத்து தமிழகத்திலும் இதேபோன்ற ஒருஎச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு குறைவான சிறார்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெற்றோர்களின் வாகனங்களை ஓட்டுவதால் சிறுவர்கள் பாதிக்கப்படுவதோடு, மற்றவர்களும் பாதிப்பதால் காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து தெலுங்கானாவை போல் சென்னையிலும் இனி சிறார்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவது பெருமளவு குறையும் என்றும் இதனால் விபத்துக்களும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஞானவேல்ராஜா மனைவி குறிப்பிட்ட நடிகை யார்?

ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா நேற்று பதிவு செய்த ஒரு டுவீட் சினிமா உலகை பரபரக்க செய்துவிட்டது. சில நடிகைகள் திருமணமான கணவரை துரத்துவதாகவும், வாய்ப்புக்காக படுக்கைக்கும் தயாராக இருப்பதாகவும்

படுக்கையறை ரகசியங்களை பொது இடத்தில் தெரிவித்த பிரபல நடிகரின் மனைவி

சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட 'பத்மாவத்' திரைப்படத்தில் நடித்த சாஹித் கபூர் தனது மனைவி மீராவுடன் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கல்ந்து கொண்டார்.

அந்த பத்து பேரில் நானும் ஒருவன்: சிம்பு

ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது

விளக்கு பூஜையுடன் முடிந்த சாவித்ரி படத்தின் படப்பிடிப்பு

சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமான 'நடிகையர் திலகம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.

பழம்பெரும் படத்தொகுப்பாளர் காலமானார்

கடந்த 1980ஆம் ஆண்டுகளில் முன்னணி படத்தொகுப்பாளராக இருந்த பழம்பெரும் எடிட்டர் டி.ஆர்.சேகர் காலமானார். அவருக்கு வயது 81