சென்னை முதல் குமரி வரை இன்று கனமழை: தமிழ்நாடு வெதர்மேன்!

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தீபாவளிக்குப் பின் நேற்றும் இன்றும் சென்னையில் நல்ல மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவ்வப்போது தமிழகம் மற்றும் சென்னையில் பெய்யும் மழை குறித்த விபரங்களை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் அவர்கள் இன்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிக பலத்த மழை பெய்யும் என்றும் இன்று ஒரு அற்புதமான நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் மிக அதிக மழை பெய்ய இன்று வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை நல்ல மழை பெய்யும் என்றும் கூறியுள்ளார்/ குறிப்பாக தமிழகத்தின் தெற்கு கடலோர பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டது போலவே தூத்துகுடியில் 90 நிமிடத்தில் 100மிமீ மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துகுடியில் மிக கனமழையும் பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்துக் கொள்ளை!!!

வேலூர் மாவட்டத்தில் ஒரு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்து மர்ம நபர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்

டீ குடிக்க சென்ற கேப்பில் அரசு பஸ்ஸை அபேஸ் செய்த வாலிபர்… போதையினால் ஏற்பட்ட பரபரப்பு!!!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் டிரைவர் இல்லாமல் நின்றிருந்த அரசு பேருந்தை சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென ஓட்டிச் சென்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

துபாயில் சஞ்சய்தத்தை சந்தித்த சூப்பர் ஸ்டார்: வைரலாகும் புகைப்படம்!

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்றார் என்பதும் அவர் தற்போது உடல் நலம் தேறி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

கார்த்தியின் அடுத்த பட பூஜை: இயக்குனர், இசையமைப்பாளர் யார்?

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது 'சுல்தான்' மற்றும் 'பொன்னியின் செல்வன்' ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ரயில்வே தண்டவாளத்தில் வேகமாக வந்த கார்: போதையில் இளம்பெண் செய்த அட்டகாசம்!

25 வயது இளம்பெண் ஒருவர் போதையில் ரயில்வே தண்டவாளத்தில் காரை மிக வேகமாக ஓட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது