தி.நகர் சரவணா ஸ்டோர் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்: வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்

  • IndiaGlitz, [Saturday,March 24 2018]

சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர் கடைக்கு மர்ம நபர்கள் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கடையின் உள்ளே இருந்த வாடிக்கையாளர்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

ரெங்கநாதன் தெருவில் பொருட்கள் வாங்க வரும் மக்களின் கூட்டம் தினமும் அதிகமாக இருக்கும். குறிப்பாக சனி, ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம். இந்த நிலையில் இன்று ரெங்கநாதன் தெருவில் உள்ள பிசியான கடைகளில் ஒன்றான சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கடையில் பணிபுரியும் ஊழியர்கள் கடையில் பொருட்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் கடையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்த தகவல் தெரிந்தவுடன் வெடிகுண்டு நிபுணர்கள் கடையில் உள்ள ஒவ்வொரு பகுதியையும் சோதனை செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது

More News

கமல்ஹாசனுக்கு தமிழக அரசு திடீர் தடையா?

சென்னை அண்ணா பல்லைக்கழக வளாகத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ஒன்றை திடீரென பல்கலைக்கழக நிர்வாகம் ரத்து செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வருங்கால கணவர் விக்கிக்கு நன்றி : நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக கூறப்பட்டு வந்தாலும் இதுவரை இருவரும் இதுகுறித்து வெளிப்படையான அறிவிப்பை வெளியிடவில்லை.

திருப்பதியில் திடீரென திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகர்

கோலிவுட் திரையுலக நடிகர், நடிகைகள் திடீரென திருமணம் செய்து கொள்வது புதிதல்ல. சமீபத்தில் கூட நடிகை ஸ்ரேயாவின் ரகசிய திருமணம் குறித்த செய்தியை பார்த்தோம்

நட்சத்திர தம்பதியின் வாரிசு நடிகை படபூஜையில் பிரபலங்கள்

கடந்த 80ஆம் ஆண்டுகளின் தமிழ், தெலுங்கு திரையுலகின் நட்சத்திரன் ஜோடிகள் டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதியினர் என்பது தெரிந்ததே

படப்பிடிப்பின்போது பிரபல நடிகைக்கு விபத்து! கண்களில் ரத்தம் வந்ததால் பரபரப்பு

பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் படப்பிடிப்பின்போது காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கண்களில் இருந்து ரத்தம் வந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது