வகுப்பறையில் தூக்கில் தொங்கிய ஆசிரியர்: கதறி அழுத மாணவர்கள்

  • IndiaGlitz, [Tuesday,April 09 2019]

சென்னை அருகே உள்ள நீலாங்கரையில் தனியார் பள்ளி ஒன்றில் வகுப்பறையிலேயே ஆசிரியர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பள்ளி மாணவ, மாணவியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இன்று காலை வழக்கம்போல் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் எட்டாம் வகுப்பறைக்கு மாணவர்கள் சென்றபோது அங்கு அந்த வகுப்பின் ஆசிரியர் அந்தோனி ஜெனிபர் தூங்கில் தொங்கியதை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மாணவர்களின் அலறல் குரல் கேட்டு ஓடி வந்த மற்ற ஆசிரியர்களும், தலைமை ஆசிரியரும் உடனடியாக இதுகுறித்து காவல்துறையினர்களுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கிய ஆசிரியரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆசிரியர் ஜெனிபர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

More News

உலகில் முதல்முறையாக ரோபோ அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை

ஸ்வீடன் நாட்டு பெண் ஒருவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சசிகுமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் 'நாடோடிகள் 2', 'கொம்பு வச்ச சிங்கம்' மற்றும் 'கென்னடி கிளப்' ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

தமிழகத்தில் 4 தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் மொத்தம் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்த நிலையில் தேர்தல் ஆணையம் 18 தொகுதிகளில் மட்டுமே இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்த ஆளை தூக்குல போடுங்க: நடிகை வரலட்சுமி ஆவேசம்

நடிகை வரலட்சுமி சமூக சேவைகளில் ஆர்வமுள்ளவர் என்பதும், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்காக 'சேவ் சக்தி' என்ற அமைப்பை நடத்தி வருகிறார் என்பதும் தெரிந்ததே. 

ஏன் இவ்வளவு சத்தம்? ரஜினி பேட்டி குறித்து குஷ்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை மும்பையில் நடைபெறவுள்ள 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.