ஒருமையில் பேசிய பிரேமலதாவுக்கு செய்தியாளர்கள் கடும் கண்டனம்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்று ஆரம்பத்தில் இருந்தே குழப்பத்தில் இருந்த தேமுதிக, எந்தவித கொள்கைப்பிடிப்பும் இன்றி ஒரே நேரத்தில் அதிமுக, திமுக என இரண்டு கூட்டணியிலும் பேரம் பேசியது. மோடி பிரதமர் என்றாலும் ஓகே, ராகுல்காந்தி பிரதமர் என்றாலும் ஓகே, யார் 7 சீட் தருகின்றார்களோ அவர்களுடன் கூட்டணி என்ற தேமுதிகவின் மனப்பான்மையை அரசியல் விமர்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா சந்தித்தபோது தேமுதிகவின் கொள்கை குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அப்போது பிரேமலதா அந்த நிருபரை ஒருமையில் பேசியதால் செய்தியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்களை ஒருமையில் மரியாதைக் குறைவாக பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில் ஒரு அரசியல் கட்சி எந்த கூட்டணியில் இடம்பெறும் என்ற கேள்வி கேட்பது இயல்பு. இந்த அடிப்படையை கூட புரிந்து கொள்ள முடியாத ஆத்திரத்தில் தேமுதிக பொருளாளர் இருப்பது காலக்கொடுமை என பத்திரிகையாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் அதிமுக கூட்டணியிலும் இடம் கிடைக்காத விரக்தியில் பிரேமலதா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் விமர்சனம் செய்து பேசினார். அதிமுக கடந்த தேர்தலில் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற்று என்ன பயன் என்றும், 37 அதிமுக எம்பிக்கள் இருந்தும் தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வர முடியவில்லை என்றும் அவர் விமர்சனம் செய்தார்,.

More News

சூர்யாவின் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்?

'என்.ஜி.கே' படத்திற்கு பின்னர் சூர்யா நடித்து வரும் 'காப்பான்' திரைப்படத்தில் மோகன்லால், ஆர்யா, பொமன் இரானி என ஒரு நட்சத்திர கும்பலே உள்ளது

மெகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்', தளபதி விஜய் நடித்த 'சர்கார்' உள்பட பல மெகா பட்ஜெட் படங்களை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின்

தாறுமாறு தலைவரே... வேற லெவல்: சிவகார்த்திகேயனை பாராட்டிய காமெடி நடிகர்!

சிவகார்த்திகேயன் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் 'மிஸ்டர் லோக்கல்' என்ற படத்தில் நடித்தார். இதனையடுத்து தற்போது அவர் ரவிகுமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை: ஓவர்டைம் வேலை செய்யும் இயக்குனர்!

அஜித் நடித்து வரும் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 ஜிவி பிரகாஷ்-சித்தார்த் படத்தின் டைட்டில் இதுதான்

'பிச்சைக்காரன்' பட இயக்குனர் சசி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், சித்தார்த் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் இன்று காலை வெளியாகவிருப்பதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்.