வனிதா மீது புதிய வழக்குப்பதிவு: பெரும் பரபரப்பு

நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் இந்தத் திருமணத்தை கடுமையாக விமர்சனம் செய்த நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் சூரியாதேவி என்ற பெண் ஆகியோர் மீது வனிதா, சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார் என்பதும் இந்த புகாரின் அடிப்படையில் சூர்யா தேவி சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே. அதேபோல் வனிதா மீது சூர்யாதேவி புகார் அளித்திருந்தார் என்பதும், இந்த புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீரென வனிதா மீது சென்னை போரூர் போலீசார் 3 பிரிவுகளில் புதியதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் கொரோனா காலத்தில் அனுமதி இன்றி வனிதா, தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியதாக அந்த குடியிருப்பை சேர்ந்த சங்க பொதுச் செயலாளர் நிஷா கோத்தாரி என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தான் வனிதா மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது

வனிதாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இங்கு நடைபெற்றதாகவும், ஆனால் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட அதிக நபர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் இந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தன்னையும், தனது கணவரையும் தாக்கி பேசியதாக நடிகை வனிதா மீது லட்சுமி ராமகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார் என்பதும் இதுகுறித்து வக்கீல் நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

ஊரடங்கு முடியும் நிலையிலும் குறையாத கொரோனா பாதிப்பு: இன்றைய பாதிப்பு நிலவரம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தினமும் சுமார் 7000ஆக இருந்து வரும் நிலையில் இன்றும் கொரோனா பாதிப்பு 7000க்கு அருகில் உள்ளது.

அடிச்சு பழுக்க விடாதேம்மா: ரசிகரின் கமெண்ட்டுக்கு பதிலடி கொடுத்த அர்ச்சனா

சன்டிவியில் 'காமெடி டைம்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான அர்ச்சனா, அதன்பின் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

ரஜினிகாந்த் இ-பாஸ் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை மாநகராட்சி ஆணையர்!

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தனது மகள் சவுந்தர்யா குடும்பத்தினருடன் கேளம்பாக்கம் சென்றார் என்றும் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது

கொரோனா லாக்டௌனில் மதுமிதா செய்த காரியம் 

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர் காமெடி நடிகை மதுமிதா. 'ஒருகல் ஒருகண்ணாடி'

ஆடுகளுக்கும் மாஸ்க் போடணுமா??? போலீஸாரின் அறிவுரையைக் கேட்டு அதிர்ந்துபோன தொழிலாளி!!!

உத்திரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவர் மும்மரமாக தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.