சாய்னா நேவல் குறித்து சர்ச்சை டுவிட்: சித்தார்த் மீது சென்னை போலீஸ் அதிரடி நடவடிக்கை


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் பதிவு செய்த சித்தார்த் மீது சென்னை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி குறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்திருந்தார். அந்த டுவிட்டுக்கு கருத்து கூறிய சித்தார்த், சாய்னா குறித்து அவதூறாக விமர்சனம் செய்ததாக புகார் எழுந்தது. இதற்கு சித்தார்த் மீது கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் மகாராஷ்டிரா மாநில காவல் துறையிடம் புகார் அளித்தது என்பதும், ஹைதராபாத் காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சாய்னா நேவால் குறித்து அவதூறாக கருத்து கூறிய நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘சித்தார்த் மீது 2 புகார்கள் வந்துள்ளதாகவும், எனவே சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவரது அறிக்கை மட்டுமே எங்களுக்கு தேவை என்றும் அவர் அளிக்கும் அறிக்கையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக தனது டுவிட்டர் பதிவு தொடர்பாக பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
