சென்னை இளைஞர்களை குறிவைக்கும் போதை ஸ்டாப்! கைது செய்யப்பட்டவர் வெளியிட்ட பகீர் தகவல்!

  • IndiaGlitz, [Monday,April 22 2019]

சென்னையில் உள்ள பணக்கார இளைஞர்களை குறிவைத்து போதை ஸ்டாம்ப், மற்றும் பல்வேறு வடிவிலான போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட 23 வயது இளைஞர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னை அண்ணாநகர் கிழக்கு முகப்பேரில், உள்ள நீச்சல் குளத்தின் அருகே, போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போலீசார், அப்பகுதிக்கு மப்டியில் சென்று நோட்டமிட்டு வந்தனர். அப்போது நீச்சல் குளம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் வண்டியை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தவாறு சில நிமிடம் நின்றார். பின் நீச்சல் குளத்தில் குளிக்க வந்த சில பணக்கார இளைஞர்கள், அவரை நோக்கி வந்து பணத்தை கொடுத்து ஸ்டாம்ப் போன்ற பொருளையும், கலர் கலராக பல்வேறு வடிவத்தில் இருந்த மாத்திரைகளையும் வாங்கி சென்றனர்.

பின்னர் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை, போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்த போது... முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். துருவித் துருவி விசாரணை செய்ததில், தான் விற்பனை செய்தது போதைப் பொருள் என்று ஒப்புக்கொண்டார்.

அவரிடமிருந்து 5 எல்எஸ்டி ஸ்டாம்ப், 12.360 கிராம் கொண்ட 23 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள், 4.830 கிராம் ஹாஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஸ்டாம்ப் வடிவில் இருக்கும் பேப்பர் நாக்கில் வைத்தால் அதிக அளவு போதை தரும் என்றும் கூறியுள்ளனர்.

விசாரணையில், இந்த இளைஞர் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சரவணன் (23 ) என்பதும் தெரியவந்தது. இவரை கைது செய்துள்ள போலீசார், இவருக்கு இந்த போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்ப் எப்படி வந்தது, இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள்.

More News

கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 வெடிகுண்டு கண்டுபிடிப்பு: மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமா?

இலங்கையில் நேற்று தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் தீவிரவாதிகளின் தற்கொலைப்படையினர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 300 பேர் பலியாகியுள்ளனர்.

மனைவியை பழிவாங்க நாய் கூட்டில் குழந்தையை அடைத்து சித்திரவதை செய்த தந்தை!

சீனாவை சேர்ந்த ஒருவர், விவாகரத்து பெற்று சென்ற மனைவியை பழிவாங்க, தன்னுடைய 20 மாத குழந்தையை பல்வேறு வகையில் 

விஜய்சேதுபதியை இயக்க போவது உண்மையா? இயக்குனர் ஆனந்த்சங்கர் விளக்கம்

விக்ரம்பிரபு நடித்த 'அரிமா நம்பி', விக்ரம் நடித்த 'இருமுகன்' மற்றும் விஜய் தேவரகொண்டா நடித்த 'நோட்டா' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த்சங்கர்,

ஒரு ரன்னில் தோல்வி: குட்டிப்பாப்பாவின் வேண்டுகோளை ஏற்றாரா தோனி?

நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வாய்ப்பு மிகவும் குறைவு என்ற நிலையில் விஸ்வரூபம் எடுத்தார் தல தோனி.

மனைவி, குழந்தைகளை கொலை செய்து வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பிய சாப்ட்வேர் எஞ்சினியர்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசிதாபாத்தில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொலை செய்த சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் அதன் வீடியோவை