ஆர்.கே.நகர் தேர்தல் கருத்துக்கணிப்பு: லயோலா கல்லூரி முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,December 14 2017]

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இப்போதைய நிலையில் எந்த கட்சி வெற்றி பெறும் என்று அரசியல் விமர்சகர்களால் கூட கணிக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் என்பவர் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்த ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளார். இவரது கணிப்பின்படி ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒருசில கருத்துக்கணிப்புகள் லயோலா கல்லூரியின் மாணவர்கள் கணித்துள்ளதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் லயோலா கல்லூரி நிர்வாகம் இதுகுறித்த செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கூறியிருப்பதாவது: லயோலா கல்லூரியோ, அதன் எந்தத்துறையோ, ஆர்.கே.நகர் தேர்தல் பற்றிய கருத்துக்கணிப்பு நடத்தவில்லை. லயோலா கல்லூரியின் பெயரில் எந்த குழுவினர் கருத்துக்கணிப்பு செய்து, அதை வெளியிட்டாலும் அதில் லயோலா கல்லூரிக்கு எந்தவித தொடர்பும் இல்லை' இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.