சென்னை உள்பட 3 மாவட்டங்களில் பள்ளிகள் இன்று இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,November 14 2017]

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில்  கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் சென்னையின் பல இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. இன்று காலையும் சென்னையின் முக்கிய இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மந்தவெளி, மைலாப்பூர், ராயப்பேட்டை, போரூர், ராமாபுரம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

ஆனாலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக பொன்னேரி அரசு கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கவிருந்த தேர்வுகள் வேறு நாளில் நடத்தப்படும்: கல்லூரி முதல்வர் கருப்பன் தெரிவித்துள்ளார்.

More News

எஸ்.ஏ.சியின் 'டிராபிக் ராமசாமி' படத்தில் சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகர்

டிராபிக் ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அவரது கேரக்டரில் பிரபல இயக்குனரும் தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

லேடி சூப்பர் ஸ்டாரின் 'அறம்' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

நடிகை நயன்தாராவுக்கு ரசிகர்கள் அளித்த லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் மிகப்பொருத்தம் என்பது அவரது 'அறம்' படம் நிரூபித்து வருகிறது.

மூன்றே நாட்களில் ரூ.6 கோடியை நெருங்கிய 'அறம்'

நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதையும் குறிப்பாக இந்த படம் கடந்த மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.1 கோடியை தாண்டி வசூல் செய்தது

'நெஞ்சில் துணிவிருந்தால்' நாயகி திடீர் நீக்கம்

ஒரு திரைப்படம் படமாக்கி கொண்டிருக்கும் நிலையில் நாயகன், நாயகி அல்லது வேறு நடிகர்கள் நீக்கம் நடைபெறுவது வழக்கம். ஆனால் ஒரு திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு பின்னர் அந்த படத்தில் இருந்து

டி.ஆர். ஒரு ஆன்மீகவாதியா? 'விழித்திரு' பிரச்சனை குறித்து மனம் திறந்த தன்ஷிகா 

தன்ஷிகா நடித்த 'விழித்திரு' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தன்ஷிகா பேசியபோது டி.ராஜேந்தர் பெயரை விட்டுவிட்டதற்காக அதே மேடையிலேயே டி.ஆர்.ஆவேசமாக தன்ஷிகாவை சொற்களால் தாக்கினார்