புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் சேகர் ரெட்டிக்கு அச்சகத்தில் இருந்து நேரடியாக வந்ததா? திடுக்கிடும் தகவல்

  • IndiaGlitz, [Thursday,December 15 2016]

ஒருசில 2000 ரூபாய் நோட்டை வாங்குவதற்காக வங்கி வாசலிலும், ஏடிஎம் வாசலிலும் சாதாரண பொதுமக்கள் கால்கடுக்க மணிக்கணிக்கில் நின்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஒருசில நாட்களுக்கு முன் அறிமுகமான இந்த நோட்டுக்கள் ஒரு தனிப்பட்ட நபர், அதாவது சேகர் ரெட்டியிடம் எப்படி வந்தது என்பது குறித்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விசாரணையில் புதிய ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட அச்சகத்தில் இருந்து நேரடியாக சேகர் ரெட்டிக்கு வந்ததாக கூறப்படுகிறது

வழக்கமாக அச்சகத்தில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் மைய அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு அதன் பின்னரே அந்த பணம் ஒவ்வொரு வங்கிக்கும் பிரித்து கொடுக்கப்படும். ஆனால் ரூபாய் நோட்டுக்களின் அவசர தேவையை கருத்தில் கொண்டு அச்சகத்தில் இருந்து நேரடியாக ஒருசில வங்கிகளுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது

இவ்வாறு நேரடியாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள ஸ்டேட் வங்கி சிறப்பு பண நிர்வாக கிளைக்கு அனுப்பப்பட்டது. இந்த கிளைகளுக்கு அனுப்பப்பட்ட பணத்தை சேகர் ரெட்டி தனது செல்வாக்கை பயன்படுத்தி அப்படியே தனது வீட்டிற்கு கொண்டு சென்றதாகவும், இதன் காரணமாகவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கத்தை, கத்தையாக அவருடைய வீட்டில் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த முறைகேட்டில் ஸ்டேட் வங்கியின் மூத்த அதிகாரிகள் சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும், வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட ரூபாய் நோட்டின் சீரியல் எண்ணையும் சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டின் சீரியல் எண்ணையும் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

சூர்யா இடத்தை பிடிக்க விஷால் முயற்சியா?

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'சிங்கம் 3' படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 23 என்று அறிவிக்கப்பட்ட போதிலும் அதில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துக்கள் யாருக்கு? 16 வருடங்களுக்கு முன்பே ஜெயலலிதா எடுத்த அதிரடி முடிவு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்ற கேள்விக்கே விடை தெரியாத நிலையில் தற்போது ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்கு என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது

'சிங்கம் 3' ரிலீஸ் தேதி மாற்றமா?

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சிங்கம் 3' திரைப்படம் வரும் 23ஆம் தேதி வெளிவரும் என்று அறிவிப்புகள் ஏற்கனவே வெளிவந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கபாலியுடன் கனெக்சன் ஆன அதர்வா படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' என்ற படத்தை இயக்கியதன் மூலம் உலகப்புகழ் பெற்றவர் இயக்குனர் பா.ரஞ்சித்.

அப்பல்லோ ரகசியம் வெளியானால் இந்தியாவில் பிரளயமே ஏற்படும். ஹேக்கர்ஸ் அதிரடி மிரட்டல் .

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையின் கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும், இந்த ரகசியங்களை வெளியிட்டால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரளயம் ஏற்படும் என்றும் ஹேக்கர்கள் மிரட்டியுள்ளனர்.