சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி: பிடிபட்ட வடமாநில வாலிபர்

  • IndiaGlitz, [Monday,April 23 2018]

சென்னை அடையாறு வங்கி ஒன்றில் பட்டப்பகலில் வடமாநில வாலிபர் ஒருவர் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடையாறு பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் இன்று திங்கட்கிழமை என்பதால் பிசியாக இருந்தது. வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர் பணம் டெபாசிட் செய்யவும், பணம் எடுக்கவும் வரிசையில் நின்றிருந்தனர்

இந்த நிலையில் திடீரென வங்கியில் நுழைந்த வடமாநில வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கையில் எடுத்து வங்கி ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் மிரட்டினார். அப்போது வங்கியில் டெபாசிட் செய்ய வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து ரூ.6 லட்சத்தை பறித்து கொண்டு அந்த மர்ம வாலிபர் ஓடினார்

அந்த வாலிபரை பிடிக்க வங்கி காவலர்களும், வங்கி ஊழியர்களும் முயற்சித்தனர். ஆனால் தப்பி வெளியே ஓடிய அந்த வாலிபர், அந்த பகுதியில் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவரிடம் சிக்கினார். பின்னர் அந்த கொள்ளையன் அடையாறு காவல்நிலைய காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டான். பிடிபட்ட வாலிபர் வடமாநிலத்தை சேர்ந்தவன் என்று அவன் வைத்திருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

More News

'ஜோக்கர்' பட பாணியில் நூதன போராட்டம்

இயக்குனர் ராஜுமுருகன் இயக்கிய தேசிய விருது பெற்ற திரைப்படமான 'ஜோக்கர்' பட பாணியில்  தென்னக நதிகள் இணைப்பு தலைவர்அய்யாக்கண்ணுவும் அவரது ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தியுள்ளனர். 

இன்று அமெரிக்கா செல்லும் ரஜினியை சந்தித்த பாஜக பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றிரவு அமெரிக்காவுக்கு செல்லவுள்ள நிலையில் சற்றுமுன் அவரை துக்ளக் ஆசிரியரும், பாஜக பிரமுகருமான குருமூர்த்தி சந்தித்து பேசியுள்ளார்.

நெட்டிசன்கள் கலாய்க்க போட்டோ கொடுத்து உதவிய நடிகை கஸ்தூரி

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ, வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோல் பயன்படுத்திய திட்டம் தோல்வி அடைந்தது என்பது தெரிந்ததே.

தனுஷின் 'மாரி 2' படத்தின் புதிய அப்டேட்

தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா', வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' மற்றும் பாலாஜிமோகன் இயக்கத்தில் 'மாரி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

26 வயது பெண்ணை மணந்த பின் டான்ஸ் ஆடிய நடிகர்

தமிழில் பச்சைக்கிளி  முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்தவர் மிலிந்த் சோமன்.