close
Choose your channels

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் மர்ம மரணம்: எரிந்த நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு!

Friday, July 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்து இருப்பதாகவும் அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே ஒரு சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையில் நேற்று மேலும் ஒரு மாணவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அவரது உடல் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த தகவல் அறிந்ததும் கோட்டூர்புரம் போலீசார் விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மர்மமான முறையில் மரணமடைந்த மாணவர் கேரளாவைச் சேர்ந்த உன்னிக்கிருஷ்ணன் என்றும் எலக்ட்ரிக்கல் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment