ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிட்ட விவகாரம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,January 23 2018]

சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரை முன்மொழிந்த தீபக், சுமதி ஆகிய இருவரும் திடீரென பின்வாங்கியதால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் 'விஷாலை முன்மொழிந்த தீபக், சுமதி ஆகிய இருவரும் மிரட்டப்பட்டனரா என விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையில் இருவரும் மிரட்டப்பட்டது  தொடர்பான முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யலாம் எனவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார் என்பது அனைவரும் அறிந்ததே.

More News

ரஜினி, கமல் அரசியல் கட்சி தொடங்க மாட்டார்கள்: நாஞ்சில் சம்பத்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருமே அதிகாரபூர்வமாக தங்கள் கட்சியின் பெயரை அடுத்த மாதம் அறிவித்துவிட்டு அரசியல் களத்தில் நேரடியாக குதிக்கவுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.

காலையில் தொடங்கி மாலையில் முடியும் கதை தான் சவரக்கத்தி: ஜி.ஆர்.ஆதித்யா

மிஷ்கின், ராம், பூர்ண நடிப்பில் ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியுள்ள சவரக்கத்தி' திரைப்பம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.

தளரா மனம் கொண்ட தமிழன் வெற்றி பெற்ற நாள்: கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார்.

அமெரிக்காவில் ஒரு நெடுவாசல் போராட்டம்: அர்னால்ட் ஆதரவு

சமீபத்தில் தமிழகத்தின் உள்ள நெடுவாசலில் விளைநிலங்களில் மீத்தேன் எடுக்க மத்திய அரசு முயற்சித்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுக்க எதிர்ப்பு குரல் எழுந்தது

சுராங்கனி புகழ் சிலோன் மனோகர் காலமானார்

சிலோன் மனோகர் என்று அழைக்கப்பட்டு வந்த மனோகர் கடந்த 70ஆம் ஆண்டுகளில் இலங்கையில் பாடகாராக இருந்தவர். மேலும் இலங்கையில் தயாரான முதல் தமிழ்ப்படமான 'பாச நிலா' என்ற படத்தில் ஹீரோவாக முதன்முதலாக நடித்தார்.