'ஜெய்பீம்' வழக்கு: நடிகர் சூர்யா குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு!

  • IndiaGlitz, [Thursday,August 11 2022]

’ஜெய்பீம்’ பட விவகாரம் குறித்து சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கு குறித்து முக்கிய உத்தரவை சென்னை ஐகோர்ட் பிறப்பித்துள்ளது.

சூர்யா நடிப்பில் ஞானவேஎல் இயக்கத்தில் உருவான ’ஜெய்பீம்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தியதாக நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ’ஜெய்பீம்’ பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு எதிரான காவல்துறை வழக்கை ரத்து செய்வதாக உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து சூர்யா ரசிகர்கள் இந்த உத்தரவை கொண்டாடி வருகின்றனர்.

More News

பிக்பாஸ் பாவனிக்கு தாலி கட்டிய அமிர்: விஜய் நடத்திய திருமணம்!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போதே அமீர் மற்றும் பாவனி ரெட்டி காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் இந்த காதல் தொடர்ந்ததாக தெரிந்தது.

படப்பிடிப்பின்போது விஷாலுக்கு மீண்டும் காயம்: மருத்துவமனையில் அனுமதி!

விஷால் நடித்த 'லத்தி' படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்கனவே இரண்டு முறை அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், காயத்தில் இருந்து மீண்ட அவருக்கு தற்போது மீண்டும் 'மார்க் ஆண்டனி' படத்தின் படப்பிடிப்பின்

'கோச்சடையான்' பட வழக்கு: லதா ரஜினிகாந்த் குறித்து முக்கிய உத்தரவு பிறப்பித்த கர்நாடகா ஐகோர்ட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான 'கோச்சடையான்' பட வழக்கு குறித்து கர்நாடக ஐகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி: இயக்குனரின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்த ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் திரையரங்கிலும் 'O2' என்ற திரைப்படம் ஓடிடியிலும் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே. 

கவர்னரை சந்தித்தவுடன் மோடி சொன்னதை நிறைவேற்றிய ரஜினி: சமூக வலைத்தளங்களில் வைரல்!

ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் கவர்னரை சந்தித்தது பெரும் சர்ச்சையை ஆகியுள்ள நிலையில் கவர்னரை சந்தித்த அடுத்த இரண்டு நாட்களில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தேசியக்கொடியை பதிவு செய்துள்ளார்