எஸ்.வி.சேகர் கைது குறித்து சென்னை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Thursday,May 03 2018]

பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தனது முகநூலில் பதிவு செய்த பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் எஸ்.வி.சேகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது அந்த மனுவின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டதோடு, எஸ்.வி.சேகரை கைது செய்ய எந்தவித தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.

இதனால் எஸ்.வி.சேகர் உடனே கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வரை அவர் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 'எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என்று நீதிபதிகள் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அவரை உடனே  கைது செய்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது

More News

நான்கு நாட்களில் இரண்டு முறை திருமணம் செய்த தமிழ் நடிகை

காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா ஆகிய தமிழ் படங்களிலும், ஒருசில கன்னட, மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை மேக்னாராஜ்.

தேசிய விருதை புறக்கணித்த 'டூலெட்' இயக்குனர் செழியன்: காரணம் என்ன?

சமீபத்தில் தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த ஆண்டு விருது அறிவிப்பில் தமிழக திரைப்பட துறை புறக்கணிக்கப்பட்டதாகவும்

விஜய்யிடம் இரண்டு கதைகள் கூறி காத்திருக்கும் பிரபல இயக்குனர்

'ராம்' மற்றும் 'பருத்திவீரன்' போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் ராம், தற்போது தனுஷின் 'வடசென்னை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

காவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டின் புதிய உத்தரவு

காவிரி விவகாரம் குறித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் இன்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி வரைவு திட்டத்தை தாக்கல் செய்யுமா?

ரோட்டுக்கடையில் ஆம்லேட் போட்ட பிரபல தமிழ் நடிகர்

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் அட்டகாசமாக தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆனவர் நடிகர் அருண்விஜய்.