விஷாலின் 'சக்ரா' படம் குறித்து நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

  • IndiaGlitz, [Tuesday,February 16 2021]

விஷால் நடித்த ‘சக்ரா’ திரைப்படத்திற்கு ஏற்கனவே பல பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு பிப்ரவரி 19ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ‘சக்ரா’ படத்தை திரையிட திடீரென தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைடன்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தங்களிடமும் ஒப்பந்தம் செய்த கதையை விஷாலை வைத்து படமாக்கி உள்ளதாக ‘சக்ரா’ படத்தின் இயக்குனர் எம்எஸ் ஆனந்தனுக்கு எதிராக புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகாருக்கு பதில் அளிக்குமாறு விஷால் மற்றும் இயக்குனர் ஆனந்தனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் விஷால் நடித்த ‘சக்ரா’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காப்பீட்டு உரிமை விவகாரத்தில் சிக்கி விஷாலின் ‘சக்ரா’ திரைப்படம் வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஷாலின் ‘சக்ரா’ வரும் 19ஆம் தேதி வெளியாகும் என அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த தடை உத்தரவு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

இசைஞாயின் ஸ்டுடியோவை பார்த்து, ரசித்து பாராட்டிய ரஜினிகாந்த்: வைரல் புகைப்படங்கள்!

இசைஞானி இளையராஜா கடந்த பல வருடங்களாக பிரசாத் ஸ்டூடியோவில் பாடல்கள் கம்போஸ் செய்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரசாத் ஸ்டூடியோவில்

2021 க்கான புதிய தொழில் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாடு தொழில் கொள்ளை மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021 ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.

சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானுக்கு மணிமண்டபம் – முதல்வர் பழனிசாமியின் அதிரடி முடிவு!

நேற்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அருந்ததியர் மாநாடு நடைபெற்றது. ஆதிதமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அனிருத்-கீர்த்தி சுரேஷ் திருமணமா? உண்மை நிலவரம் என்ன?

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அந்த கீர்த்தி சுரேஷை இசையமைப்பாளர் அனிருத் திருமணம் செய்ய இருப்பதாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில்

நீங்க தான் ப்ரோ உண்மையான ஹீரோ: அஸ்வினுக்கு வாழ்த்து கூறிய பிரபல ஹீரோ!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பதும் இந்த வெற்றிக்கு தமிழகத்தை சேர்ந்த அஸ்வின்