சிம்பு தொடர்ந்த 1 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு: ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு!

  • IndiaGlitz, [Wednesday,March 09 2022]

சிம்பு தொடர்ந்த ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கில், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிம்பு நடித்த ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் தனக்கு சம்பள பாக்கி இருப்பதாக கூறி சிம்பு புகார் அளித்திருந்தார். அதேசமயம் இந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்ததற்கு சிம்பு தான் காரணம் என்றும் அதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறு கருத்துக்களை பதிவு செய்து வருவதாக கூறி சிம்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழக்கை பதிவு செய்தார். இந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், அப்போதைய நடிகர் சங்க தலைவர், தயாரிப்பாளர் சங்க தலைவர் உள்ளிட்டோரை எதிர்மனுதாரர் சிம்பு சேர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மூன்று வருடங்களாகியும் எழுத்துபூர்வமான வாதத்தை தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்யாததால் ரூபாய் ஒரு லட்சம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த தொகையை வரும் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதி இந்த வழக்கை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

More News

அமீருக்கும் பாவனிக்கும் திருமணமா? கல்லூரி விழாவில் அவரே அளித்த பதில்!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பாவனி ரெட்டியை, அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் அமீர் காதலித்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் இருவருக்கும் திருமணமா?

ஜிவி பிரகாஷ்- பாரதிராஜா இணையும் புதிய படம்: டைட்டில் இதுதான்!

தமிழ் திரை உலகில் அதிக படங்கள் நடித்துக் கொண்டே இசையமைத்துக் கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ், புதிதாக ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் அந்த படத்தில் முக்கிய

'அஜித் 61' படத்தின் அட்டகாசமான லுக்: வைரல் புகைப்படம்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பதும் நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி இந்த படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாக

நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ்: மகளிர் தினத்தில் பூஜை

தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நயன்தாரா, த்ரிஷா, சமந்தா உள்பட ஒரு சில நடிகைகளே நடித்து வரும் நிலையில் அந்த பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பவர் ஐஸ்வர்யா

விஜய் ரசிகரை பாராட்டிய அஜித் ரசிகர்!

விஜய் ரசிகரின் செயலை அஜித் ரசிகர் பாராட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.