நீதிமன்ற நிகழ்வுகளை நித்யானந்தாவுக்கு வாட்ஸ் அப் மூலம் அப்டேட் செய்த சீடர் கைது: நீதிபதி அதிரடி

  • IndiaGlitz, [Monday,January 29 2018]

சென்னை ஐகோர்ட்டில் இன்று நித்யானந்தா குறித்த வழக்கு ஒன்று நடைபெற்று கொண்டிருந்தபோது நித்தியானந்தாவின் சீடர் நரேந்திரன் என்பவர் நித்தியானந்தாவுக்கு வாட்ஸ் அப் மூலம் அவ்வப்போது அப்டேட் செய்ததை கண்டுபிடித்த நீதிபதி அவரை கைது செய்து விசாரணை செய்யும்படி உத்தரவிட்டார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு மதுரை ஆதினமாக நித்தியானந்தா முடி சூட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த நித்தியானந்தா, அந்த மனுவில் தன்னை தானே மதுரை ஆதினம் என்று குறிப்பிட்டு கொண்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், திருத்திய மனுவை தாக்கல் செய்யும்படி நித்தியானந்தாவுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்ட நிலையிலும் நித்தியானந்தா பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதனை கடுமையாக கண்டித்த நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்யாத நித்தியானந்தா மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இந்த நிலையில் இன்றைய விசாரணையை அவ்வப்போது வாட்ஸ் அப் மூலம் நித்தியானந்தாவுக்கு அவருடைய நரேந்திரன் என்பவர் அனுப்பி கொண்டிருப்பதை நீதிபதி கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்து விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து நரேந்திரன் கைது செய்யப்பட்டார்.

More News

சொடக்கு பாடல் குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

'நிமிர்', 'மன்னார் வகையறா' சென்னை வசூல் நிலவரம்

தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் முதன்முதலாக உதயநிதி ஸ்டாலின் நடித்த நிமிர் திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்த நிலையில் இந்த படத்தின் சென்னை வாரயிறுதி வசூல் நிலவரம்

பானுப்ரியாவின் முன்னாள் கணவர் அமெரிக்காவில் மரணம்

கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் ரஜினி, கமல், விஜய்காந்த், சத்யராஜ், பிரபு உள்பட முன்னணி நடிகர்கள் பலருடன் நாயகியாக நடித்தவர் நடிகை பானுப்ரியா.

ரூ.200 கோடி கிளப்பில் இணைந்தது தீபிகாவின் 'பத்மாவத்'

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாஹித் கபூர் நடிப்பில் உருவான 'பத்மாவத்' திரைப்படம் பெரும் பிரச்சனைகளை சந்தித்து கடந்த வாரம் ரிலீஸ் ஆனது.

அனுஷ்காவின் 'பாகமதி' மூன்று நாள் சூப்பர் வசூல் விபரம்

அனுஷ்கா நடிப்பில் வெளியான 'பாகமதி' திரைப்படம் முதல்பாதி கலவையான விமர்சனத்தை பெற்றாலும் இரண்டாம் பாதியில் திடுக்கிடும் திருப்பங்களுடன் கூடிய விதிரைக்கதையால் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது.