பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: ரஜினி வழக்கு குறித்து அதிரடி உத்தரவு

கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி துக்ளக் இதழின் பொன்விழா ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும்போது 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற பேரணி குறித்து சில கருத்துகளை தெரிவித்தார்.

ரஜினிகாந்தின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலை இயக்கத்தினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் குறித்து பொய்யான தகவலை ரஜினிகாந்த் பரப்புவதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்றது. ரஜினிகாந்த் பேசியதற்கு ஆதாரம் இருப்பதாக ரஜினியின் வழக்கறிஞரும், பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக திராவிடர் விடுதலை இயக்கத்தின் வழக்கறிஞரும் வாதாடினர்.

இருதரப்பு வாதத்தை கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தார். தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக ரஜினிகாந்த் மீது திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். ரஜினியும் பேச்சால் எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட முடியாது என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

இந்த விலைக்கு.. இவ்வளவு specification.. அதிரடியாக களமிறங்கிய போக்கோ எக்ஸ் 2..!

20 ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கும் மொபைல்களில் இது சிறந்ததாக இருக்கும் என விமர்சகர்களால் கூறப்பட்டுள்ளது. சிகப்பு, நீலம் மற்றும் பர்பிள் நிறங்களில் இந்த மொபைலானது கிடைக்கிறது.

சச்சினுடன் சண்டையிட்ட இர்ஃபான் பதான் மகன்..! வைரல் வீடியோ.

"சிறு குழந்தையோடு நேரம் செலவழிப்பது எப்போதும் சந்தோசம் தான். இம்ரான் ஒரு நாள் உன்னுடைய தசைகள் என்னைவிட உன்ன தந்தையை வீட்டா வலிமையானதாக மாறும்"

ரஜினி என் மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை, இதை மீண்டும் மீண்டும் சொல்வேன்: அர்ஜூன் சம்பத்

ரஜினிகாந்த் என் மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை மீண்டும் மீண்டும் இதனை சொல்வேன் என கரூரில் நடந்த கூட்டம் ஒன்றில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியுள்ளது

பிணத்தின் கையை சமைத்துக் கொடுத்த அன்பு கணவன்; தலைதெறிக்க ஓடிய மனைவி

உத்திர பிரதேசத்தில் ஒரு அன்பு கணவர் மனைவிக்காகச் பிணத்தின் கையைச் சமைத்துக் கொடுத்து இருக்கிறார். என்னவென்று தெரியாமல் சாப்பிட்ட மனைவி வாந்தி எடுத்து,

'ஓ மை கடவுளே' வாணி போஜனால் பாதிப்பு அடைந்த தொழிலதிபர்: பெரும் பரபரப்பு

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'ஓ மை கடவுளே'. அசோக்செல்வன், ரித்திகாசிங், ரக்சன், வாணிபோஜன் நடித்த இந்த படம் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது