விஷாலுக்கு பிடிவாராண்ட்: அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

  • IndiaGlitz, [Friday,August 02 2019]

நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் பிடிவாரண்ட் உத்தரவு ஒன்றை சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடியாக பிறப்பித்துள்ளதால் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வருமான வரி செலுத்தாதது குறித்து வழக்கு ஒன்று நடிகர் விஷால் மீது பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த வழக்கில் விஷால் நேரில் ஆஜராக வருமான வரித்துறையினர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் அவர் பதிலளிக்காத காரணத்தினால், விஷால் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட எழும்பூர் நீதிமன்றம், ஆகஸ்ட் 2-ம் தேதி நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்தது

ஆனால் ஆகஸ்ட் 2ஆம் தேதியான இன்று விஷால் நீதிமன்றத்தில் ஆகாராகதால் அவருக்கு சென்னை பொருளாதார குற்றவழக்கு நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்துள்ளது.

More News

தலைவர் பதவிக்கு போட்டியிட்டு மூக்குடைந்த மதுமிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். தலைவர் பதவிக்காக ஒரு புதிய டாஸ்க்கும் வைக்கப்படும்

கும்பகோணம் ஐயர் சிக்கன்: சர்ச்சை விளம்பரத்தால் பரபரப்பு

இதுவரை நாம் 'கும்பகோணம் ஐயர் காபி; என்று தான் விளம்பரம் செய்வதை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் முதல்முறையாக மதுரையில் உள்ள ஒரு உணவகம் கும்பகோணம் ஐயர் சிக்கன்

போனிகபூருக்கு மாலை மரியாதை செய்த மூன்று பேர்!

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை'  திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் சிறப்பு காட்சி இன்று திரையிடப்பட்டது

'நேர் கொண்ட பார்வை' ஸ்பெஷல் காட்சி: தாறுமாறான படம் என விமர்சனம்

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது 

ஸ்ருதிஹாசனின் 'பறையடி' இசைக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்!

உலகநாயகன் கமல்ஹாசன் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் இசைத் துறையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் என்பதும் அவர் ஒரு நல்ல பாடகி என்பதும் தெரிந்ததே.