close
Choose your channels

50 பயணிகளை காப்பாற்றி உயிர்த்தியாகம் செய்த சென்னை பேருந்து ஓட்டுனர்

Wednesday, February 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை மாநகர பேருந்து ஓட்டுனர் ஒருவர் பேருந்தை ஓட்டிக்கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பயணிகளின் பாதுகாப்பை கருதி பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு மரணம் அடைந்தார்.

சென்னை மாநகர பேருந்து ஓட்டுனர் சர்வேஸ்வரன். இவர் இன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தை கிளப்பி மதுரவாயல் வழியாக பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்படுவது போல் உணர்ந்த அவர், உடனே பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு, கண்டக்டர் மற்றும் பயணிகளிடம் தனது நிலையை விளக்கினார்.

உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் சிறிது நேரத்தில் மரணம் அடைந்தார். பேருந்தை நிறுத்தாமல் அவர் தொடர்ந்து இயக்கியிருந்தால் அந்த பேருந்தில் பயணம் செய்த 50 பயணிகளுக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

சர்வேஸ்வரன் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் கூடுதல் நேரம் பணிபுரிந்தாரா? அவருக்கு அலுவலகரீதியாக அழுத்தம் இருந்ததா? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment