50 பயணிகளை காப்பாற்றி உயிர்த்தியாகம் செய்த சென்னை பேருந்து ஓட்டுனர்

  • IndiaGlitz, [Wednesday,February 13 2019]

சென்னை மாநகர பேருந்து ஓட்டுனர் ஒருவர் பேருந்தை ஓட்டிக்கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பயணிகளின் பாதுகாப்பை கருதி பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு மரணம் அடைந்தார்.

சென்னை மாநகர பேருந்து ஓட்டுனர் சர்வேஸ்வரன். இவர் இன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தை கிளப்பி மதுரவாயல் வழியாக பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்படுவது போல் உணர்ந்த அவர், உடனே பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு, கண்டக்டர் மற்றும் பயணிகளிடம் தனது நிலையை விளக்கினார்.

உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் சிறிது நேரத்தில் மரணம் அடைந்தார். பேருந்தை நிறுத்தாமல் அவர் தொடர்ந்து இயக்கியிருந்தால் அந்த பேருந்தில் பயணம் செய்த 50 பயணிகளுக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

சர்வேஸ்வரன் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் கூடுதல் நேரம் பணிபுரிந்தாரா? அவருக்கு அலுவலகரீதியாக அழுத்தம் இருந்ததா? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

'காற்றின் மொழி' பட நடிகை கர்ப்பம்: ரசிகர்கள் வாழ்த்து

ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்த 'காற்றின் மொழி' திரைப்படத்தில் ஆர்ஜே அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்து அனைவர் மனதையும் கவர்ந்தவர் நடிகை சாண்ட்ரா.

'மகரிஷி' நாயகனை சந்தித்த 'தேவ்' நாயகன்

கார்த்தி நடித்த 'தேவ்' திரைப்படம் நாளை காதலர் தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதால் படத்தின் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிப்ரவரி 22ல் வெளியாகும் படங்கள் குறித்து ஒரு பார்வை;

ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் மூன்று தமிழ் சினிமாக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் வரும் 22ஆம் தேதி ஐந்து திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இந்த படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

2ஆம் பாகமாக உருவாகும் பிரசன்னாவின் வெற்றிப்படம்

பிரசன்னா, லைலா நடிப்பில் பிரியா இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'கண்ட நாள் முதல்'.

இன்று முதல் அடுத்த கட்டத்திற்கு செல்லும் தனுஷின் 'அசுரன்'

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.