அண்ணியின் தங்கையை நம்பவைத்து... இளைஞர் அரங்கேற்றிய கொடூர சம்பவம்!

  • IndiaGlitz, [Saturday,April 13 2019]

சொந்த சகோதரரின் மனைவியின், தங்கை தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளாததால், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, தாம்பரம் பகுதியை அடுத்த சிட்லபாக்கத்தில் உள்ள தன்னுடைய சகோதரர் வீட்டில் தங்கி, கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் சந்தோஷ். இவருக்கு தன்னுடைய சகோதரர் மனைவியின் தங்கை, அகிலா மீது ஒரு தலை காதல் இருந்துள்ளது.

அகிலா, சென்னை பல்லாவரம் பகுதியில் லேப் டெக்னீசியனாக வேலை செய்துவந்தார். அதனால் கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய சகோதரியை பார்ப்பதற்காக, சிட்லபாக்கதில் உள்ள அக்கா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது சந்தோஷுக்கு அகிலா மீது காதல் அதிகரித்துள்ளது.

அப்படியாவது தன்னுடைய காதலை அகிலாவிடம் தெரிவிக்க சரியான நேரம் பார்த்து காத்திருந்தார். அப்போது தன்னுடைய அண்ணன் அண்ணியின் பிரசவத்திற்காக அவரை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்று உள்ளார். இந்த நேரத்தை பயன்படுத்தி அகிலாவிடம் நைசாக பேசி வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.

வீட்டிற்கு வந்த சந்தோஷ், தன்னுடைய காதலை கூறியுள்ளார். ஆனால் அகிலா தான் வேறு ஒருவரை காதலித்து வருவதால், காதலை ஏற்க மறுத்துள்ளார். மேலும் உடனடியாக அந்த இடத்திலிருந்து புறப்பட்டுள்ளார். அவரை தடுத்து நிறுத்தி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். சந்தோஷ் பேச்சுக்கு அகிலா உடன்படாததால், அவரின் கழுத்தை நெரித்து கடந்த 9 ஆம் தேதி கொலை செய்தார்.

மேலும் தன் மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிட கூடாது என்பதற்காக, 10 ஆம் தேதி அன்று அகிலாவின் நெற்றியை, கதவில் மோதி மயக்கம் அடைந்து விட்டதாக கூறி அனைவரையும் நம்ப வைத்து, அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அகிலாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணமடைந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவல் உடனடியாக போலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பின் சந்தோஷின் பேச்சில் சந்தேகம் ஏற்படவே அவரை துருவி துருவி விராசனை செய்ததில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News

இயக்குனர் அவதாரம் எடுக்கும் பிரபல காமெடி நடிகர்

நடிகர் விவேக் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்கவிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது

4 தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவை தேர்தலுடன் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் மீதியுள்ள  அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு

'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ்!

மணிரத்னம் இயக்கவுள்ள மல்டிஸ்டார் படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக கீர்த்தி சுரேஷ், பூங்குழலியாக நயன்தாரா,

வரலட்சுமியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த ஆண்டு வரலட்சுமி நடித்த 'மிஸ்டர் சந்திரமெளலி, எச்சரிக்கை, சண்டக்கோழி 2, சர்கார் மற்றும் மாரி 2 ஆகிய ஐந்து படங்கள் வெளியானது.

திருநங்கை கேரக்டருக்கு தேசிய விருது கிடைக்குமா?

தமிழில் தற்போது திருநங்கை கேரக்டரில் நடிக்க பலரும் முன்வந்துள்ளனர். குறிப்பாக 'சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கேரக்டரில் விஜய்சேதுபதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.