ஒரே துணியில் தூக்கில் தொங்கிய அண்ணன் - தம்பி: சென்னையில் பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,December 24 2019]

சென்னையில் அண்ணன், தம்பி ஆகிய இருவரும் ஒரே துணியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ஆகாஷ் மற்றும் இருதயராஜ் ஆகிய அண்ணன் தம்பி இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ஆரோக்கிய ஆகாஷ் தான் தற்கொலை செய்யப் போவதாக தனது நண்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நண்பர் உடனடியாக ஆரோக்கியஆகாஷ் சகோதரர் இருதயராஜூடன் சம்பவ இடத்திற்குச் சென்றார். அங்கு தூக்கில் தொங்கிய ஆரோக்கிய ஆகாஷை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் இந்த நிலையில் தனது சகோதரர் தற்கொலை குறித்து பெற்றோருக்கு தகவல் சொல்வதாக கூறிவிட்டு இருதயராஜ் வீட்டுக்குள் சென்றாலர் ஆனால் வெகு நேரமாகியும் இருதயராஜ் வராததால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர் உள்ளே சென்று பார்த்தபோது ஆரோக்கிய ஆகாஷ் தற்கொலை செய்து கொண்ட அதே துணியில் இருதயராஜூம் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக இருவரது உடலையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் விசாரணையில் ஆரோக்கியஆகாஷ் ஐடி கம்பெனியில் வேலை பார்த்தார் என்றும் போதை பழக்கத்துக்கு அடிமையாகி வீட்டிலேயே வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார் என்றும் இதனால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் அதனால் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது
 

இந்த நிலையில் சகோதரர் உயிர் இழந்த துக்கம் தாங்காமல் இருதயராஜும் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. அண்ணன், தம்பி ஆகிய இருவரும் ஒரே துணியில் தற்கொலை செய்து கொண்டது அந்தப் பதவியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

More News

பிரபல இயக்குனரின் படத்தில் மீண்டும் நடிக்கும் அனுஷ்கா ஷெட்டி!

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு திரை உலகிலும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் நடித்த பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு

ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை மிஸ் செய்த பிரபல நடிகர் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அழைத்தும் அவரது படத்தை இயக்கும் வாய்ப்பை பிரபல நடிகர் ஒருவர் மிஸ் செய்த செய்தி தற்போது வெளிவந்துள்ளது

தோல்வி அடைந்தால் நஷ்ட ஈடு, 100 நாட்கள் கெடு: சினிமாவுக்கு புதுக்கட்டுப்பாடு. 

தமிழ் திரையுலகில் மாஸ் நடிகர்களின் படங்கள் 100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு அவற்றில் ஒரு சில படங்கள் தோல்வி அடைந்ததால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுவது

சிறுமிகள் ஆபாச படம் பார்த்த சென்னை முதியவர் கைது!

குழந்தைகள் மற்றும் சிறுமிகளின் ஆபாச படம் பார்ப்பவர்கள் மற்றும் டவுன்லோட் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என ஏற்கனவே காவல்துறை அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர்

வாயில் பெவிகுவிக்கை ஊற்றி 52 வயது நபரின் கழுத்தை அறுத்த இளம்பெண்: சென்னையில் பரபரப்பு

தந்தை வயதில் உள்ள 52 வயது நபர் ஒருவரை வாயில் பெவிகுவிக்கை ஊற்றி சத்தம்போட விடாமல் செய்து கழுத்தை அறுத்து இளம்பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது