சென்னை ஆட்டோ டிரைவர் வங்கிக்கணக்கில் ரூ.9000 கோடி.. சமரச பேச்சுவார்த்தை நடத்திய வங்கி அதிகாரிகள்..!

  • IndiaGlitz, [Thursday,September 21 2023]

சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வங்கி கணக்கில் திடீரென ரூ.9000 கோடி வரவு வரவு வைக்கப்பட்ட நிலையில் வங்கி அதிகாரிகள் வழக்கறிஞர்கள் மூலம் ஆட்டோ டிரைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ராஜ்குமார் என்ற ஆட்டோ டிரைவர் கடந்த 9ஆம் தேதி தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவரது வங்கி கணக்கில் 9000 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது வங்கி கணக்கில் வெறும் ரூ.105 மட்டுமே இருந்தது என்றும் யாரோ தன்னை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்று நினைத்திருக்கிறார்.

இருப்பினும் தனது வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸ் தொகையை சோதனை செய்ய அவர் தனது நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பினார். பணமும் அவரது நண்பர் வங்கி கணக்கிற்கு சென்றுவிட்டது.

இந்த நிலையில் 9 ஆயிரம் கோடி ரூபாய் தவறாக ஆட்டோ டிரைவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் அதிகாரிகள் கண்டுபிடித்து உடனடியாக ராஜ்குமாரிடம் தொலைபேசியில் பேசினார். தவறுதலாக பணம் டெபாசிட் செய்யப்பட்டதாகவும் அதில் உள்ள பணத்தை செலவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுநர் ராஜ்குமார் தரப்பில் இருந்தும் வழக்கறிஞர்கள் சென்று வங்கி வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையின் முடிவில் 9 ஆயிரம் கோடி ரூபாய் பணத்திலிருந்து ஆட்டோ டிரைவர் செலவு செய்யப்பட்ட 21,000 பணத்தை திருப்பி கொடுக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக அவருக்கு வாகன கடன் வங்கி தரப்பிலிருந்து வழங்கப்படும் என்று கூறி இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

More News

விஜய் ஆண்டனி மகள் இறுதிச்சடங்கில் ஊடகங்கள் நடந்து கொண்ட விதம்: எஸ்.ஆர் பிரபு கண்டனம்..!

 நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இன்றைய 'லியோ' போஸ்டரில் என்ன டேக்லைன் இருக்கும்? விஜய் ரசிகர்கள் ஆர்வம்..!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் மூன்று போஸ்டர்கள் இதுவரை வெளியாகி உள்ள நிலையில் இந்த மூன்று போஸ்டரிலும் மூன்று டேக் லைன் வெளியாகி இருப்பதை விஜய் ரசிகர்கள் கவனித்து இருப்பார்கள்.

இந்த வார ஓடிடியில் ஒரே ஒரு தமிழ்ப்படம் தான்.. முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் 3 அல்லது 4 திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அதேபோல சில படங்கள் ஓடிடியிலும் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்

ரக்சிதா சிபாரிசு செய்தவர் பிக்பாஸ் போட்டியாளரா?  தினேஷ்க்கு சிக்கலா?

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை ஏற்கனவே பார்த்தோம்.

ஒரு தலை ஃபேன் இன்னொரு தலை ஃபேனுக்கு ஹெல்ப் பண்ணக்கூடாதா? 'ஷாட் பூட் த்ரீ' டிரைலர்..!

வெங்கட் பிரபு, சினேகா, யோகி பாபு உட்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ஷாட் பூட் த்ரீ' என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.