ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்திய வழக்கு: தமிழ் இயக்குனர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை..!

  • IndiaGlitz, [Thursday,September 19 2024]

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் உள்பட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ் இயக்குனரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் கடத்தலில் கைதான ஜாபர் சாதிக் மீது, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை தனியாக வழக்குப் பதிவு செய்தது. இப்போதைக்கு, அந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் அமலாக்கத் துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ் 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். இதில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, சகோதரர் முகமது சலீம், தமிழ் திரைப்பட இயக்குநர் அமீர் மற்றும் ஜாபர் சாதிக்கின் படத்தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட மொத்தம் 12 பேருக்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் சொத்துகளை பறிமுதல் செய்து முடக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் 12-வது நபராக சேர்க்கப்பட்ட இயக்குநர் அமீர் மீதும் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை.. மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்த பிரபல நடிகை..!

மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பது உண்மை என ஹேமா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறைகளில்

சூர்யாவின் 'கங்குவா' ரிலீஸ் தேதி இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என நேற்று வெளியான தகவலின்படி, சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பகத் பாசில், ரானா கேரக்டர்கள்.. செகண்ட் சிங்கிள் ரிலீஸ்.. அடுத்தடுத்து வரும் 'வேட்டையன்' அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, வரும் அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக  ரிலீஸ் ஆக இருக்கிறது.

குக் வித் கோமாளி பிரச்சனை.. முதன்முதலாக பிரியங்காவுக்கு ஆதரவாக பிரபலத்தின் குரல்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே பிரச்சனை வந்ததாக கூறப்படும் நிலையில் இது குறித்து பல்வேறு

2 மாத உழைப்பை வீண் பண்ணிட்டிங்களே.. லோகேஷ் கனகராஜின் வேதனை பதிவு..!

எங்களது 2 மாத உழைப்பை வீணாக்கி விட்டீர்கள். இனிமேலும் இதுபோல் செய்யாதீர்கள் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.