'சந்திரமுகி 2' என்ன ஆச்சு? வெளிவந்திருக்கும் புதிய தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பி வாசு இயக்கத்தில், சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’சந்திரமுகி’ மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் அதன் பின்னர் இந்த படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் வேட்டையன் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் ரஜினிகாந்த் முதல் பாகத்தில் நடித்த மனோதத்துவ கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தின் முக்கிய கேரக்டரான சந்திரமுகி கேரக்டரில் ஜோதிகா மீண்டும் நடிப்பாரா என்ற கேள்வியும் அவ்வப்போது எழுந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த புதிய தகவல் வெளிவந்துள்ளது. தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படம் வேட்டையன் கேரக்டரின் முழு வடிவமாக இருக்கும் என்றும் சந்திரமுகி குடியிருந்த அரண்மனையில் ஒரு புதிய குடும்பம் குடியிருக்க வருவதாகவும் அவர்களுக்கும் வேட்டையன் கேரக்டருக்கு ஏற்படும் மோதல் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் மே மாதம் இரண்டாவது வாரம் படப்பிடிப்பு தொடங்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.