இந்தியாவை பாரத் என அழைக்க வேண்டும் என 3 வருடங்களுக்கு முன்பே சொன்னேன்: 'சந்திரமுகி 2' நடிகை..!

  • IndiaGlitz, [Wednesday,September 06 2023]

இந்தியாவை பாரத் என அழைக்க வேண்டும் என மூன்று வருடங்களுக்கு முன்பே நான் கூறியிருக்கிறேன் என்று ’சந்திரமுகி 2’ படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவர் கூறியிருக்கிறார்.

கடந்த சில நாட்களாக இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில் இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. திரையுலகிலும் சிலர் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ’சந்திரமுகி 2’ படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் குறித்து கூறிய போது ’இந்தியாவை பாரத் என்று அழைக்க வேண்டும் என்று நான் மூன்று வருடங்களுக்கு முன்பே கூறிக் கொண்டிருக்கிறேன். ஆங்கிலேயர்கள் பாரத் என்று உச்சரிக்க முடியாததால் இந்தியா என்று பெயர் சூட்டினார்கள். இந்தியா என்பதற்கு அடிமை என்ற பெயர்.

ஆனால் நான் தற்போது சுதந்திரமாக இருக்கிறோம். சுதந்திரமாக சிந்தித்து முடிவெடுக்கும் நிலையில் உள்ளோம், எனவே நாம் நமது ஒரிஜினல் பெயரான பாரத் என்பதை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்தார்.

கங்கனாவின் இந்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே காண்பேன் என்று நினைக்கவில்லை: 'பாரத்' குறித்து கபிலன் வைரமுத்து

இந்தியா என்ற நம் நாட்டின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இது குறித்து தனது கருத்தை கபிலன் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.  

மீண்டும் தள்ளிப்போகிறதா சிவகார்த்திகேயனின் 'அயலான்'? 2 பெரிய படங்களுடன் மோதுகிறதா?

சிவகார்த்திகேயன் நடிப்பில்,  ரவிக்குமார் இயக்கத்தில் உருவான 'அயலான்' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதிக்கே எனது ஆதரவு: ரஜினி பட இயக்குனர் அறிவிப்பு..!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. உதயநிதிக்கு

தந்தையை இழந்த இளம் பாடகி.. சூப்பர் சிங்கர் ஜூனியரில், நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் !!  

இசையுலகில் மிக முக்கிய நிகழ்ச்சியாக கொண்டாடப்படும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் கோலாகலமாக நடந்து வருகிறது. பல ஆச்சர்ய தருணங்கள் நிகழ்ந்து வரும் நிலையில்,

80 வயது.. 47 வருட இசைப்பயணம்.. இன்றும் 8 படங்களில் பிசியாக இருக்கும் இசைஞானி இளையராஜா..!

இசைஞானி இளையராஜா கடந்த 47 ஆண்டுகளாக திரையுலகில் இசை அமைத்து வருகிறார் என்பதும்  ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார் என்பது தெரிந்ததே.