'இரும்புத்திரை' படத்தின் இரண்டாம் பாகமா சக்ரா? விஷால் பேட்டி

  • IndiaGlitz, [Friday,March 06 2020]

விஷால் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கிய ’இரும்புத்திரை’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது விஷால் நடித்து வரும் ‘சக்ரா’ திரைப்படம் ’இரும்புத்திரை’ படத்தின் இரண்டாம் பாகம் தான் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஆனால் இது குறித்து விஷால் அளித்த பேட்டியில் கூறியதாவது ’இரும்புத்திரை படம் போலவே இந்த படமும் ஒரு ஆன்லைன் முறைகேடு குறித்த படம் தான் என்றாலும் இது அந்த படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்று கூறினார். மொபைல் போன்கள் ஹேக் செய்யப்பட்டால் ஏற்படும் விளைவு தான் இந்த படத்தின் கதை என்றும் இந்த படத்தில் நவீன டெக்னாலஜி மூலம் மோசடி செய்யும் பல அம்சங்கள் இருப்பதாகவும் இது பொதுமக்களுக்கு விழிப்புணர்வை தரும் என்று குறிப்பிட்டுள்ளார்

ராணுவ அதிகாரியாக விஷால், காவல்துறை அதிகாரியாக ஷரதா ஸ்ரீநாத், மற்றொரு முக்கிய கேரக்டரில் ரெஜினா நடித்துள்ள இந்த படத்தில் மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன்ஷஙக்ர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மே மாதம் 1ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது

More News

விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகினாரா சமந்தா? பரபரப்பு தகவல் 

விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கள்ள 'காத்து வாக்கில ரெண்டு காதல்' என்ற படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது

ஜிவி பிரகாஷூக்காக தனுஷ் பாடிய பாடல்!

நடிகர் தனுஷ் நடிப்பது மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பலவித அவதாரங்களில் ஜொலித்து வருபவர் என்பது தெரிந்ததே.

'சூரரை போற்று' அடுத்த அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தாசில்தார் மனைவியுடன் கள்ளக்காதல்: தடையாக இருந்த தாய் கொலை

ஓய்வு பெற்ற தாசில்தார் ஒருவரின் மனைவியுடன் கள்ளக்காதலில் இருந்த ஒருவர், கள்ளக்காதலிக்காக தன்னுடைய தாயாரை கொலை செய்த திடுக்கிடும் சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளது

கேரளாவைக் கலக்கும் தமிழ் கிராமிய பாடலைக் கேட்டீர்களா..!

பிரித்விராஜும், பிஜு மேனனும் நேரில் சென்று பார்த்தனர்.  இருவரையு&