அரசியலுக்கு ரஜினியும் வரமாட்டார், கமலும் வரமாட்டார்: சாருஹாசன்

  • IndiaGlitz, [Monday,November 06 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று தனது ரசிகர்களை சந்தித்தபோது, 'நான் அரசியல் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி என்றும் இனியும் என்னை பார்த்து அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று கேட்க வேண்டாம்' என்றும் கூறினார். எனவே அரசியலுக்கு கமல் வருவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டுமே வெளியாகவுள்ளது. அதேபோல் ரஜினியும் மிக விரைவில் தனது அரசியல் முடிவை அறிவிப்பார் என்றும் அவரது ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன், 'ரஜினியும் கமலும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றும் ரஜினி வரமாட்டார், கமலை வரவிட மாட்டார்கள் என்பது என் கணிப்பு என்றும் கூறியுள்ளார். மேலும் ரஜினியும் கமலுமும் இணைந்து அரசியல் செய்தால் கூட 10 சதவிகிததுக்கு மேலாக ஓட்டு கிடைக்காது என்றும் ரஜினி நல்ல மனிதர் என்றாலும்  மக்கள் பிரச்சனைகளில் கமல் அளவுக்கு கூட ரஜினி ஆலோசனை நடத்தவில்லை என்றும் கூறினார்.

மேலும் கமல் எண்ணூர் கொசஸ்தலை ஆற்றை பார்வையிட்டது குறித்து கருத்து கூறிய சாருஹாசன், 'கமல் கொசஸ்தலை ஆற்றை பார்வையிட்டது செய்தியாக வரும். அன்புமணி பார்வையிட்டது செயல்பாடாக மாறும். நடிகர்கள் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு நடிக்க வருவதில்லை. தனக்கு ஒரு புகழை சம்பாதிக்கவே நடிக்க வருகிறார்கள். அரசியலுக்கு வர சினிமாவை பயன்படுத்திக்கொள்கிறார்கள்' என்று கூறினார்.
 

More News

எங்களை மேலும் நொந்து போக வைக்காதீர்கள். ஆட்சியாளர்களுக்கு ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள்

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்கள் கார்ட்டூன் ஒன்றை வரைந்திருந்தார்.

'மெர்சலை அடுத்து விஸ்வரூபம் 2' படத்திற்கும் புரமோஷன் செய்யும் தமிழிசை-எச்.ராஜா

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வெற்றியை பெற்று அபார வசூலை குவித்ததற்கு தமிழக பாஜக தலைவர்கள் கொடுத்த இலவச விளம்பரம் ஒரு முக்கிய காரணம்.

காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு நன்றி கூறிய ஷாருக்கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடியபோது இந்திய திரையுலகமே அவருக்கு நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து கூறியது.

தினத்தந்தி பவளவிழாவில் ரஜினி! பிரதமர் மோடியுடன் சந்திப்பா?

பாரத பிரதமர் நரேந்திரமோடி இன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் தினந்தந்தி பவளவிழாவில் கலந்து கொள்கிறார். இன்னும் சற்று நேரத்தில் இந்த விழா தொடங்கவுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் பிரதமர் மோடி

தினத்தந்தி பவளவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வரும் பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.