கல்லூரிகள் திறப்பது குறித்த மத்திய அமைச்சரின் அதிரடி உத்தரவு!

  • IndiaGlitz, [Tuesday,May 05 2020]

நாடு முழுவதும் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட பல தேர்வுகள் பள்ளி அளவில் நடை பெறவில்லை என்பதும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் இன்னும் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்பதால் அடுத்த ஆண்டுக்கான கல்லூரி மாணவர்கள் சேர்க்கை நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை திறக்க மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார்

கல்லூரிகள் திறந்தவுடன் முதல் கட்டமாக செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்றும் அதன் பின்னர் மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய மாணவர்கள் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் தொடங்கி அவர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மே மாதம் என்பதால் மே ஜூன், ஜூலை ஆகிய மூன்று மாதங்களுக்குள் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கல்லூரிகளைத் திறக்க மத்திய அமைச்சர் உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

மாதவரம் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரோனா! பாலுக்கு தட்டுப்பாடு வருமா?

உலகெங்கிலும் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது என்பதும், லட்சக்கணக்கான உயிர்களையும் பலியாக்கி வருகிறது என்பதும் தெரிந்ததே.

டுவிட்டரில் இணைந்த பழம்பெரும் காமெடி நடிகர்

உலகம் முழுவதும் உள்ள நடிகர், நடிகைகள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இணைந்து தங்களது ரசிகர்களுக்கு அவ்வப்போது தகவல்களை அளித்து வருகின்றனர்.

கொரொனோ கிடக்கட்டும், இதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிங்கய்யா! விஜய்சேதுபதியின் நக்கல் டுவீட்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஒன்றரை மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் வேலைக்கு செல்லாமல் பசியால் வாடுகின்றனர்.

சிங்கப்பூரில் வேலைப்பார்த்த 4,800 இந்தியத் தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு!!!

சிங்கப்பூரில் தங்கி வேலைப்பார்த்து வரும் 4,800 இந்தியத் தொழிலாளர்களுக்கு கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய உயர் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி ஆய்வுக்கு நிதித்திரட்டும் உலகின் மெகா கூட்டணி!!! தவிர்த்த அமெரிக்கா, ரஷ்யா!!!

கொரோனா தடுப்பூசி மற்றும் சிகிச்சை குறித்த ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் உலக நாடுகளை ஒருங்கிணைந்து உலகளாவிய கூட்டணி ஒன்றை  ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கி இருக்கிறது.