ராஷ்மிகாவின் போலி வீடியோ.. 3 ஆண்டுகள் சிறை.. மத்திய அரசு அதிரடி..!

  • IndiaGlitz, [Tuesday,November 07 2023]

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது போன்ற போலி வீடியோக்களை வெளியிட்டால் இனிமேல் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி போலி வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலானது. ஷாரா படேல் என்ற நடிகையின் ஒரிஜினல் வீடியோவில் உள்ள வீடியோவில் ராஷ்மிகாவின் முகத்தை பொருத்தி போலி வீடியோவாக ஏஐ டெக்னாலஜி மூலம் உருவாக்கி இணையத்தில் மர்ம நபர்கள் சிலர் பதிவு செய்துள்ளனர்.

இந்த வீடியோவுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இது குறித்து விளக்கம் அளித்து இருந்தார்

இந்த நிலையில் போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் போலி வீடியோ குறித்து புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் போலி வீடியோ தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் போலி வீடியோ வெளியிட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

More News

அர்ச்சனாவுக்கு ஆதரவு கொடுத்த முன்னாள் டைட்டில் வின்னர்.. இனிமேல் அவரது ஆர்மி பாத்துக்குவாங்க..!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான முதல் நாளில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும்  போட்டியாளர்கள் 18 பேரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கினார்

யாராவது வேணுன்னு செய்வாங்களா, ஆனால் நான் செய்வேன்.. கமலுக்கே குறும்படம் போட்ட பிரதீப்..!

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப் அவருக்கு தனது ஸ்டைலில் பிறந்தநாள்

இது பிக்பாஸா? மாயாபாஸா? ஃபுல் பார்மில் இருக்கும் அர்ச்சனா,,!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த அர்ச்சனா முதல் சில நாட்கள் அழுது கொண்டே இருந்த நிலையில் கமல்ஹாசனின் அறிவுரைக்கு பின்னர் தற்போது ஆவேசம் ஆகியுள்ளார்.

'தளபதி 68' பட இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு விடுமுறை: தயாரிப்பாளர் அர்ச்சனா அறிவிப்பு..!

இயக்குனர் வெங்கட் பிரபு விறுவிறுப்பாக 'தளபதி 68' படத்தை இயக்கி வரும் நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவருக்கு விடுமுறை அளித்துள்ளார்.

மெகா இசை வெளியீடு.. பான் - இந்தியா புரமோஷன்.. 'கேப்டன் மில்லர்' படக்குழுவின் மாஸ் பிளான்..!

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.