தமிழக அரசின் அவசர சட்டத்தில் காளைகள் நீக்கும் சட்டப்பிரிவு சேர்ப்பு

  • IndiaGlitz, [Saturday,January 21 2017]

ஜல்லிக்கட்டுக்காக தற்போது இயற்றப்படவுள்ள அவசர சட்டம் நிரந்தர தீர்வு ஆகாது என்றும் இந்த வருடம் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த உதவும் என்றும், எனவே நிரந்தர தீர்வு பெறும் வகையில் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படும் வரை போராட்டம் நீடிக்கும் என்றும் போராட்டக்காரர்களின் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு இயற்றவுள்ள அவசர சட்டத்தில் தற்போது புதியதாக காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கும் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதாக பிடிஐ தகவல் வெளியிட்டுள்ளது.

எனவே தமிழக அரசின் இந்த சட்டம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நிரந்தர தீர்வு என்று கூறப்படுகிறது. இந்த வெற்றி அனைத்துமே மெரீனா உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த 5 நாட்களாக போராடி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கே சேரும் என்பது குறிப்பிடத்தக்க்கது.

More News

7 நாளில் மன்னிப்பு. பீட்டா நிர்வாகிக்கு சூர்யா வழக்கறிஞர் நோட்டீஸ்

ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிரியான பீட்டா அமைப்பு சமீபத்தில் நடிகர் சூர்யா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

மருத்துவமனையில் இருந்து மீண்டும் போராட்டக்களத்திற்கு திரும்பிய ராகவா லாரன்ஸ். சல்யூட்

சென்னை மெரீனாவில் கடந்த ஐந்து நாட்களாக இரவு பகல் பாராது, கடுங்குளிரையும் பொருட்படுத்தாது தன்னலமின்றி ஜல்லிக்கட்டு என்ற தமிழினத்தின் அடையாளத்திற்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் போராடி வருகின்றனர்...

வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் ஊற்றி மாணவ, மாணவிகள் போராட்டம்

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமின்றி பல நல்ல விஷயங்களுக்கு வழிகாட்டியாக அமைந்து வருகிறது. தங்களுக்காக உண்மையாக போராட ஒரு கூட்டம் இருக்கின்றது என்று பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது....

சுத்த தமிழில் வாழ்த்து கூறிய மலையாள சூப்பர் ஸ்டார்

ஜல்லிக்கட்டுக்காக அலைகடலென இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சென்னை மெரீனாவில் திரண்டு கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்...

சூர்யாவின் 'சி3' படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சி3' திரைப்படம் வரும் 26ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. சிங்கம், சிங்கம் 2 வெற்றி படங்களை அடுத்து மூன்றாம் பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...