close
Choose your channels

ரஜினிக்கு மத்திய அரசு அறிவித்த மிகப்பெரிய விருது!

Saturday, November 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் நடித்து கொண்டிருக்கின்றார். அவருடன் நடித்த நடிகர்கள் கிட்டத்தட்ட திரையுலகில் இருந்து விலகிவிட்ட நிலையில் இன்றும் அவர் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துள்ளார். அவரது படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் அதனை திருவிழா போன்று கொண்டாடி வருகின்றனர்.

ரஜினிகாந்த் கடந்த 40 ஆண்டுகளில் 167 படங்களில் நடித்து முடித்துவிட்ட நிலையில் அவருக்கு மத்திய அரசு பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை கொடுத்து கெளரவப்படுத்தியுள்ளது. இருப்பினும் இதுவரை ரஜினிக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ’திரைப்படத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது’ நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்த விருது கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவின்போது அவருக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment