செல்போன் ஆப், விசாவை தொடர்ந்து இப்போ இதுவுமா… கெடுபிடி காட்டும் அமெரிக்கா!!!

 

அமெரிக்காவின் ஹீஸ்டன் மாகாணத்தில் இருக்கும் சீனத் தூதரகம் முன்பு நேற்று முன்தினம் இரவு சில முக்கிய ஆவணங்கள் எரிக்கப் பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதனால் ஏற்பட்ட தீயை அந்நாட்டுக் காவல் துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் அணைப்பது போன்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இச்சம்பவம் நடைபெற்ற சில மணிநேரத்தில் ஹீஸ்டன் நகரில் இருக்கும் சீனத் தூதரம், அமெரிக்காவில் உளவு வேலைப் பார்ப்பதாக அமெரிக்கா அரசு குற்றம் சாட்டத் தொடங்கியது. அதோடு 72 மணி நேரத்திற்குள் சீனத் தூதரகத்தை முற்றிலுமாக காலி செய்துவிட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருக்கும் உறவில் பெரும் விரிசல் ஏற்படும் என அரசியல் வட்டாரங்கள் கருத்துக் கூறத் தொடங்கி இருக்கின்றன. கொரோனா விவகாரத்தில் முளைத்த பிரச்சனை அடுத்து பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்து நிலைகளிலும் மாறிமாறி பெரும் முரணாக வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் சீன செயலிகள் தடை செய்யப்பட்டபோது தொடர்ந்து அமெரிக்காவில் இதேபோல தடை செய்வதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப் பட்டது. அடுத்து சீன-இந்திய எல்லை விவகாரத்தில் வெளிப்படையாக அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவு அளித்தது. அடுத்து தென் சீனக் கடல் பகுதியில் சீனாவிற்கு எதிரான நாடுகளோடு கைக்கோர்த்து தற்போது சீனாவை எச்சரிக்கும் வகையில் இராணுவ ஒத்திகையிலும் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.

முன்னதாக அமெரிக்காவில் சீனாவின் உயர் மட்ட கம்யூனிச அதிகாரிகளுக்கு விசா மறுக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. சீனாவின் HUwai தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டதோடு 5G ஆய்வினையும் அமெரிக்காவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. தற்போது அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகத்தையும் காலி செய்யுமாறு அமெரிக்கா வலியுறுத்தி இருக்கிறது. இதனால் இருநாடுகளின் பகை இன்னும் வலுவாகிக் கொண்டே வருவதாகப் பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

More News

என் வாழ்நாளில் இப்படி ஒரு பிறந்த நாளை கொண்டாடியதில்லை: யோகிபாபு

நகைச்சுவை நடிகர் யோகிபாபு நேற்று தனது வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்; அதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

கிரிக்கெட் ஜாம்பவானுக்கே இந்த கதியா??? இன வேறுபாட்டுக்கு எதிராக விளாசும் டேரன் சமி!!!

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் இன வேறுபாட்டுக்கு எதிராகக் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

சூர்யா பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தளித்த கலைப்புலி எஸ்.தாணு

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை இன்று அவருடைய ரசிகர்கள் மிகவும் முழுமையாக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர் என்பது தெரிந்ததே. இன்று காலை முதல் டுவிட்டர் உள்பட சமூக வலைதளங்களில்

மனைவி குழந்தையை நடுரோட்டில் தவிக்க விட்டுவிட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன கணவன்!

ஆந்திர மாநிலத்தில் மனைவி மற்றும் குழந்தையை நடுரோட்டில் தவிக்க விட்டுவிட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன கணவர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதிபரையே வசைமாறிப் பொழியும் ஜோ பிடன்: அமெரிக்க அரசியல் நடக்கும் பரபரப்பு நிகழ்வுகள்!!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலை விட தீவிரமாக அரசியல் பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது.