காவிரி விவகாரம்: திமுக பிரமுகரின் கேள்விக்கு பதிலளித்த எடிட்டர் ரூபன்

  • IndiaGlitz, [Thursday,April 19 2018]

காவிரி மேலாண்மை அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என ஒருசில திரையுலக பிரபலங்கள் நடத்திய போராட்டம் தற்போது அவர்களுக்கே எதிராக திரும்பியுள்ளது.

47 நாட்கள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்து நாளை முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை புதிய படங்கள் ரிலீசையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி வருகிறது. ஏற்கனவே உதயநிதி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் இந்த கோரிக்கையை வைத்துள்ள நிலையில் தற்போது திமுக பிரமுகர் ஜெ.அன்பழகன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில், 'ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடக்கவிடாமல் செய்து தேசிய அளவில் கவனம் ஈர்த்த கோலிவுட்டைச் சேர்த்தவர்களின் போராட்டத்தை நான் வரவேற்கிறேன். இவ்வாறே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குவரை புதிய திரைப்படங்களை வெளியிடுவதை தமிழ் சினிமா தடுக்குமா?” என்று பதிவு செய்துள்ளார்.

இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள எடிட்டர் ரூபன் கூறியதாவது: இதில் வித்தியாசம் உள்ளது சார். ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக கோலிவுட்டைச் சேர்ந்த சிலர் நடத்திய போராட்டத்துக்கு நான் உட்பட பலரும் எதிராகவே இருந்தோம். கோலிவுட் வெறும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் மட்டுமல்ல, குடும்பம் மற்றும் வாழ்வாதாரத்தைச் சார்ந்தது. ஒரு எடிட்டராக பலர் வேலை இழந்து இருப்பதை நான் பார்க்கிறேன். சினிமா ஏற்கெனவே இறந்து கொண்டிருக்கிறது”என்று கூறியுள்ளார்.

More News

சேலம் ஏரிகளை திடீரென பார்வையிட்ட சிம்பு: புதிய திட்டம் என்ன?

பியூஸ் மானுஸ் என்ற சமூக ஆர்வலர் சேலம் பகுதி மக்களுடன் இணைந்து சில ஏரிகளை தூர் வாரினார் என்பதும், அந்த ஏரிகளில் தற்போது இருக்கும் தண்ணீர்தான் அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுகிறது

நீங்க வேற லெவல் மாஸ்: சிஎஸ்கே ரசிகர்களை புகழ்ந்த ஹர்பஜன்

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஐபிஎல் போட்டியில் களமிறங்கியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சோதனையாக சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டது.

ஸ்ரீரெட்டிக்கு எதிராக போராட்டம் செய்த விஷால் பட நடிகை கைது

கடந்த சில நாட்களாக ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு திரையுலகை கதிகலக்கி கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு திரையுலகில் இவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். 

சென்னையில் செயின் திருடனை விரட்டி பிடித்த சிறுவனுக்கு காவல்துறை பாராட்டு

சென்னை அண்ணாநகரில் பெண் மருத்துவர் ஒருவரிடம் நோயாளி போல் நடித்த மர்ம நபர் ஒருவர் திடீரென அந்த பெண் மருத்துவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க செயினை பறித்து கொண்டு ஓடினார்.

தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டுக்கு கமல்ஹாசன் கூறிய நன்றி

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் லோக் ஆயுக்தா என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மட்டும் இந்த சட்டம் இல்லை.