சிம்பு-சுந்தர் சி படத்தில் இணைந்த பிரபல நாயகி

  • IndiaGlitz, [Thursday,September 27 2018]

சிம்பு நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான Attarintiki Dhaaredhi என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் தெரிந்ததே

மேலும் இந்த படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை சமீபத்தில் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் மேலும், ஒரு நாயகி இணைந்துள்ளார். அவர்தான் காத்ரின் தெரசா. ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த 'கலகலப்பு 2' படத்தில் நடித்த காத்ரீன் தெரசா மீண்டும் அவருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கில் ப்ரணிதா நடித்த கேரக்டரில் காத்ரீன் தெரசா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஜார்ஜியாவில் தொடங்கியது. ஜார்ஜியாவில் சிம்பு மற்றும் சுந்தர் சி இருக்கும் புகைப்படம் சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பியதும் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறவுள்ளதாகவும், இதில் காத்ரீன் தெரசா கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.