close
Choose your channels

சாலையில் செல்லும் போது திடீரென ஏற்பட்ட விபரீதம்.. மருத்துவமனையில் ரைசா வில்சன்..!

Thursday, August 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரைசா வில்சன் சாலையில் நடந்து செல்லும் போது திடீரென பூனை அவரை கடித்ததை எடுத்து அவர் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டதாக புகைப்படத்துடன் கூடிய பதிவை செய்துள்ளார்.

தமிழ் நடிகைகளில் ஒருவரான ரைசா வில்சன், பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட பின்னர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பதும் அதன் பிறகு அவர் ’பியார் பிரேமா காதல்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ’காதலிக்க யாருமில்லை’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு உள்ள பூனையை எடுத்து தூக்கி ஆசையுடன் கொஞ்சியுள்ளார். அப்போது அந்த பூனை அவரை கடித்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’நமது வீட்டில் இருக்கும் பூனைகள் போல் தெருவில் உள்ள பூனைகள் இல்லை’ என்ற கூறியுள்ளார். இந்த நிலையில் பூனை கடித்ததை அடுத்து அவர் மருத்துவமனை சென்று ஊசி போட்டுக் கொண்டதாகவும் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை ரைசா வில்சன் தனது வீட்டில் இரண்டு பூனைகளை செல்லமாக வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment