close
Choose your channels

மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்ட விஜய பிரபாகரன்..  நெகிழ்ச்சியான பதிவு..!

Wednesday, June 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில் வெற்றி, தோல்வி குறித்த தகவல்களும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் உள்ள சில வேட்பாளர்கள் ஆரம்பத்தில் முன்னணியில் இருந்தாலும் அதன் பின்னர் தோல்வியை தழுவி உள்ளனர்.

குறிப்பாக விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆரம்பத்தில் முன்னணியில் இருந்த நிலையில் அதன் பின்னர் இழுபறியில் இருந்த நிலையில் கடைசியில் 4,839 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ள விஜய பிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், இது ஒரு முடிவு அல்ல, இனிமேல் தான் ஆரம்பம்’ என்றும் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் தனக்கு வாக்களித்த அனைவருக்கும் தனது நன்றி’ என்றும் தெரிவித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.