கேப்டன் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசமா? ரசிகர்கள், தொண்டர்கள் அதிர்ச்சி..!

  • IndiaGlitz, [Monday,November 20 2023]

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம் அளித்து வருவதாக தகவல் வெளியாகி இருப்பது அவரது ரசிகர்களுக்கும் தேமுதிக கட்சி தொண்டர்களுக்கும் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவரது உடல்நிலை அவ்வப்போது சீராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன

அது மட்டும் இன்றி மார்புசளியால் இடைவிடாது இருமல் வந்து கொண்டிருப்பதன் காரணமாக அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் அவர் இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

பிக்பாஸ் வீட்டுக்கு வரும் 3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள்? அவர்களுக்கு பதிலாக வெளியேறுபவர்கள் யார்?

 பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 50 நாட்களாக நடந்து வரும் நிலையில் தற்போது ஒரு பெரும் திருப்பமாக மூன்று வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'சுந்தரி' சீரியல் நடிகருக்கு நிச்சயதார்த்தம்: மணப்பெண்ணும் சீரியல் நடிகைதான்.. வைரல் புகைப்படங்கள்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சுந்தரி' சீரியல் நடிகருக்கும்  சன் டிவியில் ஒளிபரப்பான 'திருமகள்' சீரியல் நடிகைக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இது குறித்த புகைப்படம் இணையதளத்தில் வைரல்

பிக்பாஸ் நிகழ்ச்சி.. கமல் கடும் விளைவுகளை சந்திப்பார்: அரசியல் கட்சி தலைவர் எச்சரிக்கை..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகள் இருப்பதாகவும் அதனை உடனே மாற்றி அமைக்க வேண்டும், இல்லாவிட்டால்

மன்சூர் அலிகான் விஷயத்தை அவ்வளவு எளிதில் விட முடியாது:  தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை எளிதில் விட்டுவிட முடியாது என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காக்கா - கழுகு குறித்து 'நச்' கருத்து பேசிய லெஜண்ட் சரவணன்...!

 கடந்த சில வாரங்களாக காக்கா கழுகு கதை  சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து லெஜன்ட் சரவணன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.