சி.வி.குமாரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,September 11 2016]

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த சி.வி.குமார் சமீபத்தில் இயக்குனராக மாறி 'மாயவன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'அதே கண்கள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1967ஆம் ஆண்டு ரவிச்சந்திரன், காஞ்சனா நடிப்பில் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் 'அதே கண்கள்' என்ற டைட்டிலில் ஒரு படம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது மீண்டும் அதே டைட்டிலில் ஒரு திரைப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
'மெட்ராஸ்' கலையரசன், ஜனனி ஐயர், ஷிவேதா, பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை ரோஹின் வெங்கடேசன் இஅக்கவுள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவும், லியோ ஜான்பால் படத்தொகுப்பும் செய்யவுள்ளனர். சி.வி.குமாரின் மற்ற திரைப்படங்கள் போலவே இந்த படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.