புதிய டிஜிபி சைலேந்திரபாபு: அதிகாரபூர்வ் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,June 29 2021]

தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தமிழக டிஜிபி திரிபாதி அவர்கள் நாளையுடன் ஓய்வு பெறுவதை அடுத்து புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகக் காவல்துறையில் சட்டம்- ஒழுங்கு டிஜிபி பதவி என்பது தீயணைப்புத் துறை, சிபிசிஐடி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம், சிறைத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை என பல டிஜிபிக்கள் பதவியில் இருந்தாலும் அனைத்திற்கும் தலையாயப் பதவி என்பதும், இதை ஹெட் ஆஃப் தி போலீஸ் ஃபோர்ஸ் (HOPF) என்றும் அழைக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு காவல்துறையின் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் சைலேந்திரபாபு என்பது குறிப்பிடத்தக்கது. புதிய டிஜிபி சைலேந்திரபாபு தமிழ்நாடு காவல்துறையின் 1987 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியாவார். தற்போது ரயில்வே டிஜிபியாக பதவியில் இருக்கும் சைலேந்திரபாபு அவர்கள் இனி தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய டிஜிபி சைலேந்திரபாபு நாளை பகல் 12 மணி அளவில் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.
 

More News

பங்களாவில் வசித்து, பன்னீரில் குளித்த குடும்பம்...! முதல்வரிடம் உதவி கேட்டு மனு....!

தமிழ் திரையுலகில் முதன்முதலாக மக்களால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் தான் தியாகராஜ பாகவதர். கடந்த 1944 - ஆம் ஆண்டு தீபாவளி அன்று, ரிலீசான படம்தான் காளிதாஸ்

'டிக்கிலோனா' பட இயக்குனருக்கு திருமணம்: நேரில் வாழ்த்து சொன்ன சந்தானம்!

நடிகர் சந்தானம் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் 'டிக்கிலோனா'. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

மீண்டும் படப்பிடிப்பிற்கு கிளம்பிய கீர்த்தி சுரேஷ்: வைரல் வீடியோ

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு இன்றி வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பிற்கு கிளம்பி உள்ளதாக

கொரோனாவால் இறந்துவிட்டதாக நாடகமாடிய கணவன், மனைவியை வெட்டி கூறுபோட்ட கொடூரம்!

ஆந்திரா மாநிலம் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அருகே அடையாளம் தெரியாத நிலையில் எரிக்கப்பட்ட சடலம்

கொரோனா தடுப்பூசி போட்டவுடன் காய்ச்சல், கையில் வலி ஏன் வருகிறது?

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் சிலருக்கு காய்ச்சல், தலைவலி,