பிப்ரவரி 4ஆம் தேதி டெல்லி செல்லும் புஸ்ஸி ஆனந்த்.. விஜய்யின் அடுத்த கட்ட திட்டம்..!

  • IndiaGlitz, [Friday,January 26 2024]

விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் பிப்ரவரி 4ஆம் தேதி டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியே வந்துள்ளதை அடுத்து விஜய்யின் அடுத்த திட்டம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.

தளபதி விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையின் போது விஜய் தொடங்க இருக்கும் கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

விஜய் தான் கட்சியின் தலைவர் என்றும், அவர் தேர்தலில் போட்டியிடுவது, எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது போன்ற ஆலோசனை நடத்தவும், கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கவும் விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் உட்பட சில நிர்வாகிகள் டெல்லி செல்ல இருப்பதாகவும் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து விஜய்யின் அடுத்த கட்ட நகர்வு அரசியல் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரை உலகில் இருந்து சிவாஜி கணேசன் முதல் விஜயகாந்த் வரை ஏராளமான நடிகர்கள் ஏற்கனவே சொந்த கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்து குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாத நிலையில், விஜய் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சென்னை வந்தது பவதாரிணி உடல்.. பண்ணைபுரத்திற்கு எடுத்து செல்லப்படுகிறதா?

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் சற்று முன் இலங்கையிலிருந்து சென்னை வந்ததாகவும் சென்னை தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் தற்போது வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மயிலிறகாய் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணி: ஏஆர் ரஹ்மான் இரங்கல்..!

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று மாலை காலமான நிலையில் அவரது மறைவுக்கு பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

அஜித்-ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் இந்த பிரபலங்கள் தான் வில்லனா? மாஸ் தகவல்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்க இருக்கும் 63 வது திரைப்படத்தின்  ஆரம்ப கட்ட பணிகள்

எனக்கு பிடித்த நபர்களை இழந்து வருகிறேன்.. பவதாரிணி மறைவு குறித்து விஷால்

கடந்த சில வாரங்களாக எனக்கு பிடித்த நபர்களை இழந்து வருகிறேன், இது வாழ்க்கை மீதான என்  தவறான புரிதலை உணர்த்துகிறது என நடிகர் விஷால், பாடகி பவதாரிணி மறைவு குறித்து பதிவு செய்துள்ளார். அவர் மேலும்

நடிகர் சூரிக்கு என்ன ஆச்சு? கையில் கட்டுடன் இருக்கும் அதிர்ச்சி வீடியோ..!

நடிகர் சூரி சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்த நிலையில் கையில் கட்டுடன் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.