மசாஜ் செண்டர் சென்ற தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி மிரட்டிய கணவன் மனைவி

  • IndiaGlitz, [Monday,December 16 2019]

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் புதுவையில் உள்ள மசாஜ் செண்டருக்கு சென்றிருந்த நிலையில் மசாஜ் செண்டரின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னையை சேர்ந்த 61 வயது மஞ்சுநாத் தொழிலதிபர் அடிக்கடி புதுவையில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனையடுத்து மசாஜ் சென்டரின் உரிமையாளர் ராஜேஷ் என்பவர் அவருக்கு நண்பரானார்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொழிலதிபருக்கு போன் செய்த ராஜேஷ், புதுவையில் புதிய மசாஜ் சென்டர் கிளை ஒன்றைத் திறந்து உள்ளதாகவும் அதில் இளம் பெண்கள் மசாஜ் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் சபல ஆசையுடன் அந்த புதிய மசாஜ் சென்டருக்கு சென்ற தொழிலதிபருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இடம் மசாஜ் சென்டர் போலவே தெரியவில்லை

இதனையடுத்து உள்ளே தொழிலதிபரை அழைத்துச் சென்ற ராஜேஷ் மற்றும் அவரது மனைவி, அவரை மிரட்டி நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்தனர். பின்னர் அவரிடம் இருந்த பணம், நகை மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை எடுத்து கொண்டு அவருடைய செல்போனில் இருந்து ’கூகுள் பே’ மூலம் ரூபாய் ஐந்து லட்சத்தை தன்னுடைய வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்து கொண்டார்

இதனை அடுத்து இதனை வெளியே சொன்னால் நிர்வாண வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும் கணவன், மனைவி இருவரும் மிரட்டியுள்ளனர். இதன் பின்னர் மஞ்சுநாத் போலீசிடம் புகார் அளிக்க, போலீஸ் ராஜேஷ், அவருடைய மனைவி மற்றும் அவருடைய நண்பர் மூவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

'தளபதி 65' குறித்த முக்கிய தகவல்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சென்னை, டெல்லி

டிக்டாக் நட்பால் விபரீதம்: மனைவியை தொலைத்த கணவரின் பரிதாப நிலை!

டிக் டாக்கில் வீடியோ பதிவு செய்வது என்பது ஆரம்பத்தில் ஒரு பொழுதுபோக்காக இருந்த நிலையில் தற்போது அதுவே பலருக்கு போதையாக மாறிவிட்டது.

'தளபதி 64' படத்தில் இணைந்த மேலும் இரண்டு நடிகர்கள்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று

அடுத்தடுத்த சில நிமிடங்களில் விஷம் குடித்து தற்கொலை செய்த மாமனார்-மருமகள்: அதிர்ச்சி காரணம்

ஆரணி அருகே ஒரே வீட்டில் மாமனார் மற்றும் மருமகள் அடுத்தடுத்த சில நிமிடங்களில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

ஒரே மாதத்தில் கோடீஸ்வரன் ஆன விவசாயி: காரணம் வெங்காயம்

வெங்காயம் விலை ஏற்றம் காரணமாக வட இந்தியா முதல் தென்னிந்திய வரை கோடிக்கணக்கான மக்கள் படும் சிரமத்தில் இருந்த நிலையில் ஒரு விவசாயி ஒரே மாதத்தில் கோடீஸ்வரனாகி உள்ளார்