தனிநபர் வருமான வரி, ஜனாதிபதி சம்பள உயர்வு: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

  • IndiaGlitz, [Thursday,February 01 2018]

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் இன்று காலை பாராளுமன்றத்தில் இந்த ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் ஒருசில முக்கிய அம்சங்களை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த பட்ஜெட்டின் இன்னும் ஒருசில முக்கிய அம்சங்களை பார்ப்போம்:

  • தனிநபர் வருமானவரி உச்ச வரம்பு ரூ.2.5 லட்சம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை
     
  • 56 விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்
     
  • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 99 நகரங்கள் தேர்வு;
     
  • இறக்குமதி செய்யப்படும் செல்போன்களுக்கு சுங்க வரி 15ல் இருந்து 20 சதவீதமாக அதிகரிப்பு
     
  • 5ஜி சேவை குறித்து சென்னை ஐஐடியில் ஆய்வு
     
  • எம்.பி.க்களுக்கு படிகள் ஏப்ரலுக்கு பிறகு உயர்வு
     
  • குடியரசு தலைவரின் சம்பளம் மாதம் ரூ.5 லட்சமாகவும், துணை குடியரசு தலைவரின் சம்பளம் ரூ.4 லட்சமாகவும் உயர்வு
  • கிராமங்களில் இணையதள வசதிகளை ஏற்படுத்த ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு
     
  • 4000 கி.மீ நீளத்திற்கு புதிய ரயில் பாதை
     
  • 8 கோடி ஏழை பெண்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் இணைப்பு
     
  • ரூ.250 கோடி ஆண்டு வருவாய் உடைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைப்பு

இன்று காலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை அடுத்து இந்திய பங்குச்சந்தையின் குறியீடுகள் உயர்ந்தன. ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்து முடித்தவுடன் பங்குச்சந்தை இறக்கம் கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் 438.79 புள்ளிகள் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

பள்ளிகளில் டிஜிட்டல் போர்டுகள், கிசான் கிரெடி கார்டு வசதி: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் 2018-2019க்கான பட்ஜெட்டை தற்போது வாசித்து வருகிறார்.

ஊட்டியாக மாறிய சென்னை

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் அடித்து வருவதால் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இன்னும் கொஞ்சம் சேர்த்து பேசியிருக்கணும்: 'நாச்சியார்' வசனம் குறித்து ஜோதிகா

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்த 'நாச்சியார்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானபோது, அந்த டீசரின் முடிவில் ஜோதிகா பேசிய கெட்டவார்த்தை ஒன்று பெரும் சர்ச்சைக்குள்ளானது.

ரிலீஸ் நாளில் ஆன்லைனிலும் வெளியாகிறது 'மதுரவீரன்

தமிழ்த்திரையுலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், தமிழ்ராக்கர்ஸ் உள்பட ஒருசில இணையதளங்கள் ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் நாளிலேயே திருட்டுத்தனமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்வதுதான்.

அமலாபால் கொடுத்த பாலியல் புகார்! ஒருமணி நேரத்தில் கைது செய்த போலீஸ்

பிரபல நடிகை அமலாபால், இயக்குனர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.