74 வருட பிரிவிற்குப் பிறகு முதல் சந்திப்பு… மனதை உலுக்கும் நெகிழ்ச்சி  சம்பவம்!

  • IndiaGlitz, [Friday,January 14 2022]

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் காரணமாகச் சிறு வயதிலேயே பிரிந்துவிட்ட சகோதரர்கள் இருவர், 74 வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்டு அன்பை பரிமாறிய சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை நடைபெற்று அரைநூற்றாண்டுகள் ஆகிறது. கடந்த 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தின்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சகோதரர்களில் மூத்தவர் ஹபீப் இந்தியாவில் தங்க, மற்றொருவரான சித்திக் பாகிஸ்தானுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் ஹபீப் தனது தாயுடன் பஞ்சாப்பில் வசித்து வந்திருக்கிறார்.

80 வயதான ஹபீப் தற்போது பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான கர்தார்பூருக்குச் சென்றுள்ளார். அங்கு சிறு வயதிலேயே பிரிந்துவிட்ட தனது சகோதரர் சித்திக்கை சந்தித்துள்ளார். இதனால மனம் நெகிழ்ந்து சந்தோஷத்தில் அவரைக் கட்டித்தழுவி ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்திருக்கிறது.

மேலும் 74 வருடப் பிரிவிற்குப் பிறகு ஹபீப் மற்றும் சித்திக் இந்தச் சந்திப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

புஷ்பாவாக மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்… இணையத்தில் வைரலான புகைப்படம்!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “புஷ்பா“.

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரூ.50 கோடிக்கு வியாபாரமாகிவிட்டதா சூர்யா படம்?

சூர்யாவின் திரைப்படம் ஒன்று படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே திரையரங்குகளுக்கு பின் வெளியாகும் டிஜிட்டல் ரிலீஸ் உரிமை ரூ 50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தலைப்பொங்கல் கொண்டாடிய சினேகன் - கன்னிகா ரவி: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான சினேகன் மற்றும் கன்னிகா ரவி தலைப்பொங்கல் கொண்டாடியதன் புகைப்படங்கள் அவர்களுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

விஷாலின் 'வீரமே வாகை சூடும்': ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதி செய்த படக்குழு!

விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' என்ற திரைப்படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

சுந்தர் சி அடுத்த படத்தின் பூஜை: டைட்டில், நாயகி அறிவிப்பு!

பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர் சி இயக்கத்தில் 'அரண்மனை 3' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது என்பதும் இதனை அடுத்து தற்போது அவர் 'தலைநகரம் 2' உள்பட மூன்று