close
Choose your channels

யாராவது என் பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கோங்க: திருமண மண்டபத்தில் கெஞ்சிய தந்தை!

Saturday, November 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கர்நாடக மாநிலத்தில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில் கடைசி நேரத்தில் திடீரென திருமணம் நின்றதால், அந்த பெண்ணின் தந்தை கல்யாண மண்டபத்தில் ‘யாராவது என் பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கோங்க’ என கெஞ்சி கேட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

கர்நாடகா மாநிலம் ராம்நகர் என்ற பகுதியில் பாக்யஸ்ரீ என்ற பெண்ணுக்கும் பசவராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில் கடைசி நேரத்தில் பசவராஜுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளதும், அவர் மனைவியை பிரிந்து வாழ்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பெண்ணின் திருமணத்திற்காக லட்சக்கணக்கில் கடன் வாங்கி செலவு செய்தும் திருமணம் நின்றுவிட்டதே என மன வருத்தத்தில் இருந்த பெண்ணின் தந்தை, திருமண மண்டபத்தில் இருந்த கூட்டத்தை பார்த்து தனது மகளை திருமணம் செய்துகொள்ள யாராவது தயாராக உள்ளீர்களா? என கேட்க, திருமணத்திற்கு வாழ்த்து சொல்ல வந்த ஆனந்த் என்ற இளைஞர், பாக்யஸ்ரீயை திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.

இதனையடுத்து அதே மணமேடையில் ஆனந்துக்கும் பாக்யஸ்ரீக்கும் திருமணம் நடந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment