யாராவது என் பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கோங்க: திருமண மண்டபத்தில் கெஞ்சிய தந்தை!

  • IndiaGlitz, [Saturday,November 23 2019]

கர்நாடக மாநிலத்தில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில் கடைசி நேரத்தில் திடீரென திருமணம் நின்றதால், அந்த பெண்ணின் தந்தை கல்யாண மண்டபத்தில் ‘யாராவது என் பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கோங்க’ என கெஞ்சி கேட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

கர்நாடகா மாநிலம் ராம்நகர் என்ற பகுதியில் பாக்யஸ்ரீ என்ற பெண்ணுக்கும் பசவராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில் கடைசி நேரத்தில் பசவராஜுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளதும், அவர் மனைவியை பிரிந்து வாழ்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பெண்ணின் திருமணத்திற்காக லட்சக்கணக்கில் கடன் வாங்கி செலவு செய்தும் திருமணம் நின்றுவிட்டதே என மன வருத்தத்தில் இருந்த பெண்ணின் தந்தை, திருமண மண்டபத்தில் இருந்த கூட்டத்தை பார்த்து தனது மகளை திருமணம் செய்துகொள்ள யாராவது தயாராக உள்ளீர்களா? என கேட்க, திருமணத்திற்கு வாழ்த்து சொல்ல வந்த ஆனந்த் என்ற இளைஞர், பாக்யஸ்ரீயை திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.

இதனையடுத்து அதே மணமேடையில் ஆனந்துக்கும் பாக்யஸ்ரீக்கும் திருமணம் நடந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More News

'தர்பார்' படத்திற்காக அனிருத்தின் சரவெடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தர்பார்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில்

கமல்-ரஜினியுடன் கூட்டணி வைக்க திமுக திட்டமா? அமைச்சரின் அதிரடி பேட்டி

கடந்த சில நாட்களாக கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாகவும்

கமல்-ரஜினி இணைப்பு: பின்னணியில் பிரசாந்த் கிஷோரா?

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் தமிழக அரசியல் களத்தில் இறங்கி உள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கணவரை கொன்று புதைத்த இடத்தை அடுப்பங்கரையாக மாற்றிய மனைவி!

'பாபநாசம்' என்ற படத்தில் கமல் ஒரு கொலை செய்து போலீஸ் ஸ்டேஷன் கட்டப்பட்டு வரும் இடத்தில் புதைத்துவிடுவார். போலீசார் கடைசி வரை அந்த கொலையை கண்டுபிடிக்கவே முடியவில்லை

ஒரே நேரத்தில் மூன்று பேர்களுடன் உறவு வைத்திருந்த பெண் மர்ம மரணம்

கணவன், கள்ளக்காதலன் மற்றும் இன்னொருவர் என மூன்று பேர்களுடன் ஒரே நேரத்தில் உறவு வைத்திருந்த பெண் மர்மமான முறையில் ஆற்றங்கரையில் பிணமாக இருந்தது திருப்பூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது